Monday, December 12, 2011

மற்றவை - முல்லை பெரியாறு அணை


முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக அ.மார்க்ஸ் என்பவர் எழுதிய இந்தக் கட்டுரையை படித்து பாருங்கள். பெரியாறு அணையைப் பற்றிய  பிரச்சனையின் தாக்கம் நமக்கும் புரியும். 

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல் அ.மார்க்ஸ்:

கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர்ப்பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலயாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான் இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை ‘எல்லைத் தமிழ்’ என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.
அரிசி, காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் கேரளத்திற்கு தமிழகத்திலிருந்துதான் போகின்றன. தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு மலையாளத்தாரின் தேநீர்க்கடை இருக்கும். கிட்டத்தட்ட தமிழக முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும்  மலையாள ஆலுக்காஸ் குழும நகைக் கடைகளும், முத்தூட் நிதி நிறுவனங்களும் சமீப காலமாகப் பரவியுள்ளன. மலையாளத்தார்கள் மத்தியிலுள்ள ஒற்றுமை உணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமை, இன உணர்வு, தொழில் முனைவு ஆகியன குறித்து தமிழர்கள் மத்தியில் ஒருவகை ஏக்கமும் கோபமும்  உண்டு. சமீபத்தில் நான் சவூதி சென்றிருந்த பொழுது அங்கே மத உணர்வைத் தாண்டி தமிழர்கள் மத்தியிலுஞ்சரி, மலையாளிகள் மத்தியிலுஞ்சரி இந்த மொழி அடையாளம் கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

சமீபகாலமாக இருதரப்பிலும் இந்த இன உணர்வும் அதன் இன்னொரு பக்கமான இன வெறுப்பும் கூடுதலடைவதில் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு பக்கத்திலும் இன உணர்வு இயக்கங்கள் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுமே இதற்குக் காரணமாகியுள்ளன. கேரளத்தைப் பொருத்த மட்டில் பரம வைரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் இந்த விசயத்தில் ஒரே குரலில் முழங்குகின்றன. அங்கே இன உணர்வு இயக்கம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் எல்லா மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே அந்தக் ‘குறை’யைப் போக்கக் கூடியனவாகவே உள்ளன.
கடந்த நான்கைந்து  நாட்களாக இரு மாநிலங்களிலும் எல்லையோரங்களில் பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. இன்றைய நாளிதழ்ச் செய்திகளின்படி இங்கே கோவையில் மட்டும் 37 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களெல்லாம் கேரளத்தில் தாக்கப்படுன்றனர். தற்போது நடந்து கொண்டுள்ள இந்த வன்முறைகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பொருத்த மட்டில் கேரள அரசியல்வாதிகளுக்கே பெருத்த பங்கிருக்கிறது. சென்ற மாதம் பெய்த கடும் மழையில் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே கட்சி வேறுபாடுகளின்றி அணை உடையும் பீதிப் பிரச்சாரத்தைப் பல்வேறு வடிவங்களில் அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெரிய அளவில் போட்டிபோட்டுக் கொண்டு போராட்டங்களையும் கேரளக் கட்சிகள் நடத்தத் தொடங்கின. இது இங்கேயும் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. இயக்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அப்பால் முல்லைப் பெரியாறு அணைப் பாசன விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கேரளத்திற்குச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
முல்லைபெரியாறு அணை 116 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள-தமிழ்நாடு எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேக்கடியில் கட்டப்பட்டது. 1886ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னருடன் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணம் செய்துகொண்ட  ஒப்பந்தத்தின்படி நீர்த்தேக்கத்திற்கென 8000 ஏக்கர் நிலத்தையும் அணைக்கென மேலும் 100 ஏக்கர் நிலத்தையும் 999 ஆண்டு குத்தகைக்கு திருவிதாங்கூர் அரசு அளித்தது. கேரளத்தில் ஒடுகிற பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 4576 சதுர கி.மீட்டரில் 114 சதுர கி.மீ மட்டுமே தமிழக எல்லையில் அமைந்துள்ளது. எனினும் ஆண்டுதோறும் நீரோடும் இந்த ஆற்று நீர், அணை கட்டப்படுவதற்கு முன், எவ்விதப் பயனும் இன்றி கேரள எல்லைக்குள் ஓடி அரபிக் கடலில் கலந்தது. அதே நேரத்தில் மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் இராமானாதபுரத்தின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்து கிடந்ததை ஒட்டி பிரிட்டிஷ் அரசு முல்லை ஆறும் பெரியாறும் கலக்கும் இந்த இடத்தில் இப்படி ஒரு அணையைக் கட்டி, மேற்குத் திசையிலோடி அரபிக் கடலில் கலந்த பெரியாற்று நீரைக் கிழக்குத் திசையில் வங்கக் கடலை நோக்கித் திருப்பியது.

1887- 1895 ஆண்டுகளில் இராணுவ உதவியுடன் மேஜர் பென்னிகுயிக் என்கிற பொறியாளர் சுண்ணாம்பையும் செஞ்சாந்தையும் கொண்டு இந்த அணையைக் கட்டி முடித்தார். அருகில் சிற்றணை ஒன்றும் இத்துடன் இணைந்துள்ளது. திருப்பப்பட்ட நீர் வைகை ஆற்றையும் அணையையும் நிரப்பித் தமிழ்ப் பகுதிகளில் பாசனத்திற்கு வழி செய்தது. பின்னர் மின்சார உற்பத்திக்கும் இந்நீர் பயன்படுத்தப்பட்டது. அணையைக் கட்டிய பென்னிகுயிக் இன்றளவும் இப்பகுதி தமிழ் விவசாயிகளால் நன்றியுடன் நினைவுகூறப்படுகிறார். மதுரையிலுள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவருக்கொரு சிலையும் உண்டு. அணையை கட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டப் பணப் பற்றாக் குறையைச் சரிகட்ட தனது மனைவியின் நகைகளை அவர் விற்றார் எனவும் சொல்லப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ் அணை 176 அடி உயரம் உடையது. 22.5 டி.எம்.சி நீர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இதன் மூலம் கிடைக்கிறது. அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ள போதிலும் அணையின் நிர்வாகம், அணையின் நீர்ப் பயன்பாடு எல்லாம் தமிழகத்திற்கே உரியது. இதற்கென திருவிதாங்கூர் அரசுக்குச் சென்னை மாகாண அரசு ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் குத்தகை அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். பிரிட்டிஷ் ஆட்சி போனபின் (1947), ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் பலமுறை (1950, 58, 69) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் அச்சுதமேனன் கேரள முதலமைச்சராக இருந்தபோது (1970) ஏக்கர் ஒன்றிற்குக் குத்தகைத் தொகை ரூ 30ம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிலோவாட்டுக்கு ரூ12ம் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் திருத்தப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டொன்றுக்கு 2.5 லட்ச ரூபாய் நில வாடகையாகவும், 7.5 லட்ச ரூபாய் மின்சார உற்பத்திக்காகவும் தமிழக அரசு கேரளத்திற்குக் கொடுத்து வருகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கேரள அரசுக்குத் திருப்தியளிக்கவில்லை. வழக்குகள் நிலுவையிலுள்ளன.

999 ஆண்டு கால ஒப்பந்தம், தங்கள் ஆற்று நீரின் பயன்பாட்டைத் தமிழக மக்கள் அனுபவிப்பது ஆகியவற்றைக் கேரள அரசியல்வாதிகளின் மனம் ஏற்க மறுத்தது. இதை வைத்து ஒரு உணர்ச்சி அரசியலொன்று அங்கே கட்டமைக்கப் பட்டது. இதற்கிடையில் முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழாக 50 கி.மீ தொலைவில் மூன்று மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணையைக் கேரள அரசு கட்டியது. 1979ல் மோர்வி அணை உடைந்து சேதம் ஏற்படுத்தியதை ஒட்டி காலத்தால் பழசாகிப் போனதும், நீர்க்கசிவு உடையதும், ரொம்பப் பழைய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டதும், புவி அதிர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ளதுமான முல்லைப் பெரியாறு அணை உடையும் பட்சத்தில் இடுக்கி, ஆலப்புழை, பந்தனந்திட்டாப் பகுதிகளில் வாழும் சுமார் 40 இலட்சம் மக்கள் அழிவது உறுதி எனப் பீதியூட்டிப் பிரச்சாரங்கள் செய்யப் பட்டன.  பெரியாறு அணை உடைந்தால் கீழே உள்ள இடுக்கி உட்பட மேலும் இரண்டு அணைகள் சேர்ந்து உடைந்து சேதத்தை அதிகமாக்கும் எனவும் அரிய உயிரினங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த பெரியாறு வனப் பகுதியும் அழியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அணை உறுதியாக உள்ளது. அது உடைவதற்கு வாய்ப்பே கிடையாது. உடைந்தாலும் மும்மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணை நீர்ப்பெருக்கைத் தாங்கிக் கொள்ளும். முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கான சதி முயற்சியாகவே கேரள அரசும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பது தமிழகத் தரப்பில் பேசப்படும் நியாயம். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்தாலோ நீர் நிர்வாகத்தைக் கேரள அரசு வைத்துக்கொண்டாலோ அது மிகப்பெரிய இழப்பாக முடியும் என்கிற நியாயமான  அச்சம் தமிழக விவசாயிகளைச் சூழ்ந்தது.

கேரள அரசு, அணைப் பாதுகாப்பு குறித்து எழுப்பிய பிரச்சினையை ஒட்டி மத்திய நீர் ஆணையம், அணையிலுள்ள நீரின் அளவை 142.2 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ள ஆணையிட்டது. தமிழக அரசு பணிந்த போதும் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் அதன்மூலம் மேலும் 11.25 டி.எம்.சி நீர் தமிழகத்திர்குக் கிடைப்பதைத் தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. குறைந்த பட்சம்  145 அடி உயரம் வரையேனும் நீரைத் தேக்கி வைக்க அனுமதி வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. கேரள அரசு இதை ஏற்காததைத் தொடர்ந்து அணைப் பாதுகாப்பைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.  தமிழக, கேரள அரசுகளின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகள் அக்குழுவில் இருந்தனர்.
அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் எனவும் நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவ்வாறே ஆணையிட்டது. அணையில் தேவையான பராமரிப்புப் பணிகளச் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சென்ற மார்ச் 2006ல் அணைப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி 136 அடிக்கு மேல் தமிழக அரசு நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டது. சேதம் விளைவிக்க்க் கூடிய அணை தொடர்பான நடவடிக்கைகள் எதுவாயினும் கேரள அரசின் ஒப்புதலில்லாமல் மேற்கொள்ளக் கூடாது எனவும் அச்சட்டம் வரையறுத்துள்ளது. அணையில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் கெரளத் தரப்பில் இடையூறுகள் செய்யப்படுகின்றன..

உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கேரள அரசு இயற்றியுள்ள இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. அப்படியான ஒரு ஆணையை இட மறுத்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை நியமித்தது. இரு அரசுகளும் ஒவ்வொரு உறுப்பினரை இக்குழுவில் நியமித்துக் கொல்ளலாம் என்பதைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும் ஒரு குழு எதற்கு என்கிற நியாயமான கேள்வியைத் அது எழுப்புகிறது. கேரள அரசோ ஓய்வு பெற்ற நீதிபதி கே.டிதாமஸை இகுழுவிற்கு நியமித்துள்ளது.
நில அதிர்வுப் பீதியைக் கேரள அரசு எழுப்பியதையொட்டி தமிழக அரசு அணைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைத்த  நால்வர் குழு இந்தியத் தர நிர்ணயங்களின்படி அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. இப்பகுதியில் நில அதிர்வு மூன்றாம் அளவு நிலைக்குள்ளேயே உள்ளது என்பதால் ஆபத்துக்கு வாய்ப்பில்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனினும் கேரள அரசு ஐ.ஐ.டி நிறுவனத்தை ஆய்வு செய்யச் சொல்லி அது அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.  அணை நில அதிர்வைத் தாங்காது என்பது அவ்வறிக்கையின் சாரம். இந் நிறுவனம் நீதிமன்றத்திற்கு வந்து அதன் கூற்றை நிரூபிக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

இந்தப் பின்னணியில்தான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நிறைவேறியுள்ளன. இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் உருவாகியுள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பீதியையும், உணர்ச்சியையும் தூண்டும் வகையில்  பேசுவதை இரு தரப்பு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். கூடங்குளப் பிரச்சினையில் இரு மாநில மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடன் இந்திய அரசு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதை இரு தரப்பினரும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய தருணம் இது. தமிழக விவசாயிகளின் அச்சம், அணைப் பாதுக்காப்பு குறித்த கேரள மக்களின் கவலை இரண்டிலுமுள்ள நியாயங்களை இரு தரப்பும் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். வன்முறைகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரும் கூட்டறிக்கைகளை விட வேண்டும். உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதன்பின் கேரள அரசு தனது கவலைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும். தேவையானால் தமிழகப் பகுதியில் மேலும் இரு சிற்றணைகளைக் கட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் திட்டத்தையும் யோசிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் பாரம்பரிய உரிமைகளை மதித்தலும், பேச்சுவார்த்தைகளும் மட்டுமே பலனளிக்கும். இனவாத உணர்ச்சி அரசியல், பிரச்சினைகளை மிகைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஆனால் அத்தகைய கருத்துக்களே இங்கு முகநூல் முதலான இணயத் தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மலையாள மனோபாவம்” என்றெல்லாம் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது. இது போன்ற பிரச்சாரங்கள் அங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. முகநூல் பக்கங்களில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதுகிற பல நண்பர்கள் காட்டும் மவுனமும் கவலை அளிக்கிறது.

இன் நிலையில் நேற்று (டிச 9) புதுச்சேரியில் தோழர் சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைப் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தோழர் கல்யாணி ( பேரா. கல்விமணி ) அவர்கள் தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்படுவது குறித்தும், அங்கே தமிழர்கள் கடைகள் தாக்கப்படுவது குறித்தும் கண்டன அறிக்கை ஒன்றை நாம் வெளியிட வேண்டும் என்று் கருத்துத் தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.

Sunday, December 11, 2011

மற்றவை - நான்கு விசயங்கள்

                      ** நான்கு  விசயங்கள்  **

கனிமொழி ஜாமீன்:



ற்கனவே எனது பதிவில்  சொல்லியிருந்தது போலவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. எதோ விடுதலை கிடைத்துவிட்டது போல அவரது கட்சியினர் செய்த வரவேற்புக்கு அளவேயில்லை. விமான நிலையத்திலிருந்து வீடு வரை கனிமொழிக்கு அப்படி ஒரு வரவேற்பு அலப்பறைகள் செய்திருந்தனர். (அவர் ஏதோ நாட்டிற்கு நன்மை செய்தது போல!!!) மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட்டு, இப்போது ஜாமீனில் வெளி வந்த கனிமொழி தனது பேட்டியில் இனிமேல் தான் அதிரடி அரசியல் செய்யப்போவதாக சொல்லியிருந்தார்.ஆறு மாத சிறை வாழ்க்கையால், அவரது தாயார் , தன் மகளுக்கு கட்சியில் பெரிய பதவி தர வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். அதற்கு கலைஞர் குடும்பத்தில் உள்ள சிலர் எதிர்த்து வருகின்றனர். எனக்கென்னவோ கனிமொழி பேசாமல்  தனது இலக்கிய வாழ்க்கைக்கு செல்வது நல்லது என்று நினைக்கிறேன். பார்க்கலாம்... அவரின் அடுத்த மூவ்மெண்டை..

முல்லைப் பெரியாறு அணை:


பூதாகரமான பிரச்சனை ஆகிவிட்டது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. கேரளா அரசு தனது சைடில் சில விசயங்களை மக்களின் முன் வைத்து  புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறதாகவும், அது உடைந்தால் , அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சுனாமியை விட பேராபத்து ஏற்படும். அதனால் இலட்சணக்கணக்கில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படும் என்று பீதியைக் கிளப்பி விடுகின்றது. அது உடைந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் "டேம்999" என்ற படம் வேறு பயங்கரமாகக் காட்டியிருப்பதாக சொல்லுகின்றனர். ஒரு வேளை இப்படியும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் கேரள மக்கள் உள்ளனர். இது இப்படி இருக்கையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து அரசுக்கு ரிப்போர்ட் தந்திருக்கின்றனர். அதில் 1886ம் ஆண்டு இந்த அணையை சுண்ணாம்பு மற்றும் சிமெண்டு கொண்டு கட்டியிருப்பதாகவும், இது ஒரு புவியீர்ப்பு விசையினால் செயல்படும் அணையென்றும் சொல்லியிருக்கின்றனர். மேலும் அணையின் பாதுகாப்பிற்காக குறுகியகால பாதுகாப்பு திட்டம் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு திட்டம் என்ற  வகையில் அணையைச் சுற்றி பாதுகாப்பிற்காக என்னென்ன செய்திருக்கின்றனர் என்றெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கின்றனர். தேவையான பாதுகாப்பில்தான் அணை உள்ளது, அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற முடிவையும் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர்.

எப்படியாவது இடுக்கி அணையின் தண்ணீர் வரத்தைப் பெருக்கி கொண்டு, தனது மாநிலத்திற்கு பயன்தரும் வகையில் கேரள அரசு செயல்படுவதாக சுற்றியுள்ள மக்கள் அம்மாநில அரசை குறை சொல்கின்றனர். புதிய அணை கட்டினால் நிச்சயம் கம்பம், தேனி மற்றும் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை கேரள அரசு தராது எனவும் இதனால் வேளாண்மையை நம்பியுள்ள பல இலட்சம் குடும்பங்கள் வறுமை நிலைக்குச் செல்ல வேண்டிவரும் என்று அப்பகுதி மக்கள் எண்ணிக் கொண்டு தங்கள் நலத்திற்காக போராடிக் கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசு இதுநாள் வரை வேடிக்கைப் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது. மத்திய அரசு தலையிட்டு இப்பிரச்சனையை தீர்த்து வைத்தால் இரு மாநில சகோதர சகோதரிகளுக்கும் இருக்கும் நட்புறவிற்கு பங்கம் ஏற்படாது. இந்தப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வரும்.

மீண்டும் உண்ணாவிரதம்-அன்னா:

வயசான இந்தப் பெரியவர் சும்மாவே இருக்க மாட்டேங்கிறார். ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் நினைத்துக் கொண்டு இருப்பர். லோக்பால் மசோதாவுக்காக நீண்ட காலமாக போராடி வரும் அன்னா ஹசாரேவிற்கு காங்கிரஸ் அரசு இன்னமும் பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு வேளை அன்னாவுடன் அனைத்து மக்களும் சேர்ந்து போராடினால் மசோதா தாக்கல் செய்யப்படலாம். இனி வரும் தேர்தல் காலத்தில் காங்கிரஸுக்கு நிச்சயம் பேரிடிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. மக்களின் நன்மைக்கு சில விசயங்கள் செய்தால் அவர்களுக்கு நல்லது.

காமெடி பேட்டி:

ஒஸ்தி படத்திற்கான சன் டிவியில் நிகழ்ந்த நேற்றைய பேட்டியைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தில் வரும் காட்சிகளைப் போலவே பேட்டியின் போது அலப்பறைகள் செய்தனர். அதிலும் தரணியின் அலப்பறைக்கு அளவேயில்லை. போதாக்குறைக்கு டி.ராஜேந்தரையும் பேட்டிக்கு அழைத்திருந்தனர். ஏண்டா அழைத்தோம் என்று தரணி நினைக்கும் அளவிற்கு டி.ஆரின். தம்பட்டம் தாண்டவாமாடியது. எது எப்படியோ , டி.ஆரின் தாண்டவத்தைப் பார்த்து நிகழ்ச்சி முடியும் வரை வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. சூப்பர் காமெடி.

*******************************************************

Saturday, December 10, 2011

மற்றவை: ஒஸ்தி - விமர்சனம்

             **  ஒஸ்தி - விமர்சனம்  **


விண்ணைத்தாண்டி வருவாயாவில் அலட்டல் இல்லாத நடிப்பில் கவர்ந்த STR என்ற சிம்பு, வானம் படத்திலும் அதே போல் அமைதியாக நடித்ததால் நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்தது. இந்தப் படம் ஒஸ்தியும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தருமா?தொடர்ந்து படியுங்கள்.

ஹிந்தியின் தபாங்க் படத்தை ரீமேக் ஆக்கியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் இருக்கும் காட்டுப்பாக்கம் என்ற ஊரின் மாஸ் இன்ஸ்பெக்டர்தான் சிம்பு. கான்ஸ்டபிள்களுக்கும்,கலெக்டர்,கமிஷ்னர் மற்றும் ரவுடிகளுக்கும் சிம்புதான் மாஸ். சிம்புவைக் கண்டாலே பயம். அப்படி இருக்கையில் தேர்தலில் ஜெயிப்பதற்காக மக்களுக்கு கொடுக்கவிருக்கும் அரசியல்வாதியான வில்லன் சோனுவின் பணத்தை சிம்பு கைப்பற்றிக் கொள்கிறார். அதனால் சோனுவுக்கும் சிம்புவுக்கும் பகை. இதில் யார் ஜெயித்தார்கள்?வெண் திரையில் பார்க்க..!


சிம்புவின் நடிப்பு:

நெல்லை ஸ்லாங்,பாடி லாங்குவேஜ், டயலாக் மாடுலேஷன் என நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார் சிம்பு. க்ளைமாக்சில் சிக்ஸ் பேக் வேறு காட்ட முயன்றிருக்கிறார். இத்தனை உழைப்புக்கள் இருந்தும் மீசையில்லாத அவரது முகத்தைப் பார்க்கும் போது சின்ன பையன் போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அதனால் சிம்பு செய்யும் அத்தனை மாஸ் வேலைகள், பன்ச் டயலாக் போன்றவற்றை ஏற்க முடியவில்லை. அதுதான் படத்தின் பெரிய மைனஸ். மெச்சூர்டான ரோல்களை செய்வதற்க்கு இன்னும் சிறிது வருடங்கள்  பொறுத்திருந்தால் சிம்புவுக்கு நல்லது. மற்றபடி சிம்பு, ரிச்சா தொடர்பான காட்சிகள் இதம்.



அவ்வப்போது கான்ஸ்டபிள் சந்தானத்தின் காமெடியால் முதல் பாதி படம் கொஞ்சம் நன்றாகப் போகிறது. பிற்பாதியில் சிவாஜி த பாஸ், ஒஸ்தி த மாஸ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சிம்பு அலப்பறை செய்வதால் வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை பார்க்கத்தான் வேண்டும்.


ரிச்சா நடிப்பு:
"மயக்கம் என்ன"-வில் அருமையான நடிப்பில் கவர்ந்த ரிச்சாவுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு காட்சிகளே இல்லை. டயலாக்ஸ் ரொம்பக் குறைவு. ஒட்டியானம் அணிந்து கொண்டு இடையையும்,  பரந்த முதுகையும் காட்டியபடி வந்து சிம்புவை கவர்கிறார். நம்மையும் கிளாமர் கெட்டப்பில் கவர்கிறார். திருமணத்திற்கு  அப்புறம் வரும் ஒரு காட்சியில் சிம்புவிடம் "ஒஸ்தி வேலன்னா யாரு..உங்க பேரு காவல்துறைதானே?" என்று கேட்கும் போது திடீர் சிரிப்பை வரவழைக்கிறார்.


இயக்குனர் திறமை:
படத்தை நெல்லை களத்திற்கு கொண்டு சென்றதற்கு இயக்குனரைப் பாராட்டலாம். படத்தில் எல்லா வசனங்களையும் சிம்புவுக்கு கொடுத்துவிட்டாரா? சிம்பு வரும் அனைத்து காட்சிகளிலும் அவர் மட்டும்தான் வசன மழை பொழிகிறார். கொஞ்சம் குறைத்திருக்கலாம். தாங்க முடியவில்லை. மற்றபடி  தில், தூள், கில்லி படங்களில் வரும் விறு விறுப்பு இதில் மிஸ்ஸிங்க்.

இசை:
தமனின் இசையில் "நெடுவாழி" பாடலும் பாடலுக்கேற்ற நடன அமைப்பும் நன்றாக உள்ளது. சிம்புவின் நடனம் சிறப்பாக உள்ளது. பிண்ணனி இசையில்
படம் முழுக்க ஹே..ஏய்..ஒஸ்தி மாமு என்று சொல்லிக் கொண்டு இரைச்சலோடு அமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு ஓ.கே. சந்தானத்தின் காமெடி சில காட்சிகள் ஒ.கே.மற்றவை சுமார். வி.டி.வி. கணேஷ் நடிப்பு சுமார். சண்டைக் காட்சிகள் மசாலா பிரியர்களுக்குப் பிடிக்கும். வில்லன் , நாசர், ரேவதி நடிப்பு ஒ.கே. ஜித்தன் ரமேஷ் பாவம். சரண்யா மோகன் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.

ஒஸ்தி - ஓவர் அலப்பறையில் நாஸ்தியான படம்.

*******************************************************

Sunday, November 27, 2011

மற்றவை:மயக்கம் என்ன - விமர்சனம்

             மயக்கம் என்ன -  விமர்சனம்

யிரத்தில் ஒருவனுக்குப் பிறகு வந்திருக்கும் செல்வராகவனின் படமாதலால் படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு நிறைய இருந்தது. படத்தின் டிரெய்லரும் ரசிக்க வைத்து விட்டதால் ஹைப் நிறைய இருந்தது. அந்த எதிர்பார்ப்பை செல்வாவும், தனுஷும் நிறைவு செய்தார்களா? படியுங்கள்.


அப்பா, அம்மா இல்லாது தனது தங்கை மற்றும் நண்பர்களின் பராமரிப்போடு வாழும் ஒரு சராசரி இளைஞனுக்கு(தனுஷ்), Wild Life Photography-ல் சாதிக்க நினைக்கும் எண்ணம். எப்படியாவது வாழ்க்கையில் தன் இலட்சியத்தில் முன்னேற துடிக்கிறார். ஒரு சமயத்தில், தனுஷின் நெருங்கிய நண்பன்  தனது கேர்ள் பிரெண்டை அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த கேர்ள் பிரெண்டுக்கும்(ரிச்சா), தனுஷுக்கும் ஆரம்பம் முதலே சண்டையோடு நட்பு வளர்கிறது. ஒரு கட்டத்தில் ரிச்சா , தனுஷை லவ் பண்ண ஆரம்பிக்கிறார். தனுஷுக்கும் போக போக ரிச்சாவை பிடிக்கிறது. இருப்பினும் தனது நண்பனின் கேர்ள்பிரண்டை காதலிப்பது தவறு என்று நினைத்து விலக நினைக்கிறார். பின்பு ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஃபாரஸ்டில் எடுத்த  போட்டோக்களை கொடுத்து, மிகப்பெரிய Wild Life Photographer-ஆன ஒருவரிடம் அசிஸ்டெண்டாக சேர வேண்டுகிறார். ஆனால் அவர் தனுஷை ஏமாற்றி விடுகிறார். தனுஷின் போட்டோவை வைத்து அவர் பெயர் வாங்கி கொள்கிறார். இதனால் மனமுடையும் தனுஷுக்கு விபத்து ஏற்படுகிறது. இயலாமையினால் மனம் வருந்தி குடிக்க ஆரம்பிக்கிறார். கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு தனுஷின் மனைவி ரிச்சா, தனுஷின் மேல் ஒரு நம்பிக்கை வைத்து வாழ்கிறார். அவரின் நம்பிக்கை  நிறைவேறியதா? வெள்ளித்திரையில் காண்க!


தனுஷின் நடிப்பு:
படத்தின் பலத்திற்கு தனுஷின் நடிப்பு ஒரு காரணம். ஒரு சராசரி புகைபட கலைஞராக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் வசனங்களை விட பாடி லாங்குவேஜ் மற்றும் எக்ஸ்பிரஷங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் ஒவ்வொரு ப்ரேமிலும் தனுஷின் நடிப்பு அற்புதம். க்ளைமாக்சில் தனுஷின் நடிப்பைப் பார்க்கும் போது இதயம் கொஞ்சம் இளகிப்போகிறது.

ரிச்சாவின் நடிப்பு:
தெலுங்கு வரவான ரிச்சாவிற்கு இதுதான் முதல் படம். படத்தின் முதல் பாதியில் தனுஷோடு சண்டை போட்டு, பின்பு சிறிது சிறிதாக அவரை லவ் பண்ண ஆரம்பிக்கும் காட்சிகளிளெல்லாம் ரசிக்க வைக்கிறார். படத்தின் பிற்பாதியில் இவரது கேரக்டருக்கு நிறைய முக்கியத்துவம் இருப்பதால் அதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் க்ளைமாக்சில் காட்சியில் வசனமின்றி வெறும் முக பாவனையிலேயே நடித்து கைதட்டல் பெறுகிறார். சில காட்சிகளில் ரிச்சாவின் கண்கள் கூட பேசுகிறது.சூப்பர்ப்.
மேலும் தனுஷின் நண்பர்களாக வரும் அனைவரும் காட்சிக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.


இயக்கம்:
செல்வராகவனுக்கு இந்தப் படம் நிச்சயம் ஹிட் படம்தான். படத்தில் முதல் பாதியை தனுஷ், ரிச்சா இருவருக்கும் காதல் வருவதுவரை கொண்டு செல்கிறார். பிற்பாதியில் கொஞ்சம் சீரியஸாக கொண்டு சென்று க்ளைமாக்சில் கைதட்டல் பெறுகிறார். வசனங்களை குறைத்து எக்ஸ்பிரஸென்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் செல்வாவின் டிரேட் மார்க் காட்சிகள் வருகிறது. கணவன் மனைவி உறவை இந்தப் படத்தில் கொஞ்சம் டீசெண்டான காட்சிகளோடு அமைத்திருக்கிறார். முதல் பாதியில் வரும் ஒரு காட்சியில் தனுஷின் நண்பன் ஃபாரஸ்ட் டிரிப்புக்கு ரிச்சாவை அழைக்கும் போது அவர் சரியென்று சொல்வது, தனுஷைக் காதலிப்பதற்கென்றே காட்சியமைத்தது போல இருக்கிறது.


ஒளிப்பதிவு:
படத்திற்கு மிகப் பெரிய பலம் இதுதான். ஆயிரத்தில் ஒருவனில் அசத்திய ராம்ஜியின் கேமிரா வொர்க் இந்தப் படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. படம்
போட்டோகிராபி சம்பந்தமாக இருப்பதால் ஒவ்வொரு ப்ரேமும் அவ்ளோ அழகு. அதிலும் அந்த ஃபாரஸ்ட் போட்டோஷூட் கொள்ளை அழகு. ஓட ஓட பாடலில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது. ஒளிப்பதிவிற்காகவே படத்தைப் பார்க்கலாம்.


இசை:
ஜி.வி.ப்ரகாஷ்-க்கு இன்னோரு ஹிட் ஃபிலிம். தெய்வதிருமகளில் பேசப்பட்ட இவரது இசை+பிண்ணனி இசை நிச்சயம் இதிலும் பேசப்படும். படத்தில் நிறைய காட்சிகளில் வரும் அந்த ஒரு ட்யூன் மனதை அள்ளுகிறது.


               மயக்கம் என்ன - மனதை அள்ளும்
 
*************************************




Wednesday, October 26, 2011

மற்றவை:வேலாயுதம் விமர்சனம்

* மற்றவை:வேலாயுதம்  விமர்சனம் *


இந்த வருட தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்களில் எது வெற்றி பெறும், எது ப்ளாப் என்ற கேள்விக்கு இந்த விமர்சனத்தில் பதில் கிடைக்கும். இப்போது விஜய்-ந் வேலாயுதம் படத்தைப் பற்றி பார்ப்போம்.


ஜர்னலிஸ்ட் ஜெனிலியா, தன் சக நண்பர்களுடன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தாதாக்கள் செய்யும் அண்டர்கிரவுண்ட் தொழில்களை எல்லாம் கண்டுபிடிக்கும் போது அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது நண்பர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். ஜெனிலியாவையும் கத்தியால் குத்திவிட்டு உடலை வீசி விடுகின்றனர். அந்த சம்பவத்தில் ரவுடிகளும் தவறுதலாக செத்து விடுகின்றனர். உயிர் பிழைத்த ஜெனிலியா, சூப்பர் ஹீரோ வேலாயுதம் என்ற ஒரு கற்பனை மனிதனை உருவாக்கி, சூப்பர் ஹீரோ வேலாயுதம் தான் ரவுடிகளையும்  அழித்தான் , மேலும் தவறு செய்பவர்களை அவன் நிச்சயம் அழிப்பான், என்ற ஒரு பொய்யான தகவலை மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நம்புமாறு செயல்களை செய்கிறார். இந்நிலையில்   தங்கச்சியின் திருமணத்திற்காக , சிட்பண்டில் சேமித்த பணத்தை பெற்றுக் கொள்ள சென்னைக்கு வருகிறார் வேலாயுதம் என்கிற பால்காரர் விஜய். வில்லன்களின் ஒவ்வொரு ப்ளான்களும் சந்தர்ப்பவசத்தால்  விஜய்யின் மூலம் நிறுத்தப்படுகிறது. மக்களும் மீடியாக்களும் வேலாயுதம் என்கிற சூப்பர் ஹீரோ தான் வில்லன்களின் ப்ளான் களை நிறுத்துவதாக நம்புகின்றனர். ஒரு கட்டத்தில் விஜய்யே நிஜ வேலாயுதமாக மாறி வில்லன்களை அடக்குகிறார். இதனால் வில்லன் கூட்டம் அவரை கொல்ல நினைத்து, பாம் வைக்க, அதில் விஜய்யின் தங்கச்சி இறந்து போகிறார். இதனால் வெகுண்டெழும் விஜய் வில்லன்களை அழிக்கிறார். இதுதான் படத்தின் கதை.

விஜய்யின் நடிப்பு:
காமெடி, டான்ஸ், ஆக்சன் என அனைத்து விசயங்களிலும் விஜய் தனது வழக்கமான பாணியை செய்திருக்கிறார். அவ்வப்போது, தங்கச்சியிடம் பாசத்தில் உருகுகிறார். முறைப் பெண் ஹன்சிகாவை டீசிங்க் செய்கிறார். சந்தானத்துடன் காமெடி செய்கிறார். ஆக்சன் காட்சிகளில் விஜய் மிரட்டுகிறார்.
சூர்யா தன் படங்களில் தன் சிக்ஸ்பேக் உடலைக் காட்டுவது போல, விஜய்யும் ஒரு காட்சியில் தன் உடலைக் காட்டுகிறார். சூர்யாவிடம் இருக்கும் சிக்ஸ் பேக் விஜய்யிடம் இல்லை. இருப்பினும் ஒரு பில்டப்பிற்காக அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். 

ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன் அனைவரும் தங்கள் கடமையை செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.

விஜி ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஆவரேஜ்தான், ரத்தத்தின் ரத்தமே பாடல் திரையில் பார்க்கும் போது ரசிக்கும் படியாக உள்ளது. பிண்ணனி இசையும் நன்று.

ஒளிப்பதிவும் மிக நன்று.


 எப்போதும் ரீமேக் படங்கள் எடுக்கும் இயக்குனர் ராஜா , இந்தப்படத்தில்தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். விஜய்யின் மாஸ் பற்றி நினைத்து,
அவருக்கு ஏற்ற ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். பக்கா கமர்சியல் கதையை எடுத்து, அதற்கேற்ற வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் சந்தானத்தின் காமெடி சிரிக்கும்படி சிறப்பாக உள்ளது. ஆக்சன் சீன்கள் மிரட்டலாக உள்ளன. ஏழாம் அறிவை விட, வேலாயுதம் பெட்டர்.

வேலாயுதம் - கமர்சியல் மசாலா எண்டெர்டெயின்மெண்ட்
கமெண்ட் கார்னர் - விஜய் ரசிகர்களுக்கும், மசாலா பட பிரியர்களுக்கும் இந்தப்படம் ஒரு சரவெடி.


*******************************************************


மற்றவை: ஏழாம் அறிவு - விமர்சனம்

                 * ஏழாம் அறிவு - விமர்சனம் *


மக்கெல்லாம் தெரியாத ஒரு தமிழனின் வரலாற்றுச் சிறப்பை சொல்லியிருக்கும் படம்தான் ஏழாம் அறிவு. 1600ம் ஆண்டில் காஞ்சிவரத்தை தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்த பல்லவ மன்னர்களில், போதி தர்மர் என்ற இளவரசனின் வாழ்க்கைதான் படத்தின் கரு. போதி தர்மரைப் பற்றி தெரிந்து கொள்ள எனது முந்தைய பதிவான இதை "தெரிஞ்சுக்கோங்க - போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும் " க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இனி படத்திற்குப் போவோம்.

1600ம் ஆண்டில் சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வித புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றனர். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி , தனது கடமையைச் செய்ய அந்த கிராமத்திற்கு சென்ற போதி தர்மரை, அந்த கிராமத்து மக்கள் அவரை அனுமதிக்க மறுக்கின்றனர். அதனால் அவர் ஊரின் எல்லையில் ஒரு குகையில் வாழ்கிறார். ஆபத்தான அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை அவர் குணப்படுத்தி விடுவதால் , அதன் பின் அம்மக்கள் அவரை வணங்குகின்றனர். எதிரிகளின் படையெடுப்பிலிருந்து  மக்களைக் காத்துக் கொள்ள , போதி தர்மர் அவர்களுக்கு தற்காப்புக் கலையைச் கற்றுக் கொடுக்கின்றார். தனது கடைமையை முடித்து, சொந்த ஊருக்கு செல்ல விளையும் போது,  அவர் உடல் அந்த மண்ணில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணவில் விசம் வைத்து அவரை கொன்று விடுகின்றனர். காலம் உருள்கிறது. தற்காலத்தில் சீனாவில் இருப்பவர்கள் திரும்பவும் அந்த நோயை இந்தியாவில் பரப்பி, இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கின்றனர். அந்த நோயைப் பரப்புவதற்கு போதி தர்மரின் அனைத்துக் கலைகளையும் கற்றுள்ள ஒரு சீன இளைஞனை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறார்கள்., போதி தர்மரின் அனைத்து திறமைகளையும் , அவரது டி.என்.ஏ. வைக் கொண்டிருக்கும் அவர் சந்ததியில் வந்த ஒருவருக்கு  தூண்டச் செய்து திரும்பவும் போதி தர்மரின் திறமைகளையும் வெளிக்கொணர ஒரு மரபியல் துறை ஆராயச்சி மாணவி முயல்கிறார். அவரை அழிக்க அந்த சீன இளைஞன் முயல்கிறான். இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க!

சூர்யாவின் பர்பெக்டான நடிப்பு, இந்திய சினிமாவில் முக்கியமானவராக உருவாகியிருக்கும் இயக்குனர், தலை சிறந்த ஒளிப்பதிவாளர் என டாப் லெவல் நபர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு ஏக போக எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? மேலும் படியுங்கள்.

பர்பெக்ஷனிஸ்ட் சூர்யா படத்தில் தன் பங்கை அருமையாக செய்திருக்கிறார். அந்த போதி தர்மர் கேரக்டர், சர்க்கஸ் இளைஞன் என இரண்டிலும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. பாராட்டுக்கள் சூர்யா. க்ளைமாக்ஸ் ஆக்சன் சீனில்  சூர்யாவின் உழைப்பு தெரிகிறது. வெல்டன் சூர்யா.

கமலின் வாரிசான ஸ்ருதி முதன் முதலில் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். டப்பிங்கும் அவரே. படத்திற்கு இவருடைய கேரக்டர்தான் மிக மிக முக்கியமானது. நடிப்பில், தான் கமலின் வாரிசுதான் என்பதை நிரூபித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார்.

படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் திறமையும் சிறப்பும் படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. அட்டகாசம். "முன் அந்தி சாரல் "பாடலை எடுத்த விதம் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
 

இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை. காட்சிக்கேற்ப பிண்ணனி இசை உள்ளது. பாடல்கள் ஒக்கே.

படத்தின் இயக்குனரான முருகதாஸ், இந்த படத்தில் ஒரு தமிழனின் பெருமை மறைக்கப்பட்டிருப்பதை ஆதங்கத்துடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தமிழன் அடக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை படத்தின் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு மனிதர் காஞ்சிவரத்தில் இருந்தாரா? என்று நினைக்கும் வண்ணம் அவரது சிறப்பை, முக்கியத்துவத்தை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

 
அருமையான கதை இருந்தும் , அட்டகாசமான திரைக்கதையுடன் விறு விறுப்பாக எடுத்திருக்கவேண்டிய படம் இது. ஆக்சன் சீன்கள் நிறைய வைப்பதற்கு படத்தில் வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் அதனை செய்யாதது படத்திற்கு மைனஸ்தான். படம் மென்மையாகத்தான் செல்கிறது. அட்டகாசமான தொடக்கத்துடன் படத்தின் ஆரம்பத்தில் பயமூட்டிய வில்லன் நடிப்பு, படம் முழுவதும் ஒரே மாதிரி பார்ப்பது, வசியம் பண்ணுவது போன்ற காரணத்தால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஒரு காட்சியில் சாக்கடை அல்லுபவர்,ரோட்டில் செல்லும் ஒரு பெண் போன்றவர்கள் எல்லாம் வில்லனின் வசியத்தால் திடீரென்று குங்க்-பூ ஸ்டைலில் சூர்யாவை அடிப்பது பார்க்க காமெடியாக உள்ளது. இருந்தாலும் சூர்யாவிற்காகவும் , ஸ்ருதிக்காகவும், ஒளிப்பதிவிற்காகவும், போதி தர்மருக்காகவும் இந்தப் படத்தைப் ஒருமுறை பார்க்கலாம்.

ஏழாம் அறிவு - தமிழனின் வரலாறு.
கமெண்ட் கார்னர் - விறு விறுப்பு குறைவு.

****************!!**Happy Diwali**!!*************

Saturday, October 22, 2011

தெரிஞ்சுக்கோங்க - ஸ்டீவ் ஜாப்ஸ்



நான் கனவுகள் காண்பவன் என நீங்கள் கூறலாம். ஆனால் நான் ஒருவன் மட்டுமே கனவுகள் காண்பவனல்ல.

மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் லெனான் எழுதிய இந்த வரிகள் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு மிகவும் பிடித்தமானது. ஜான் கண்ட கனவுகள் பலவற்றை, ஏன் அனைத்தையும் நனவாக்கிக் காட்டியவர். அவர் நனவாக்கிக் காட்டிய முயற்சியின் பலன்கள் நமக்கு நன்றாக தெரிந்தவை. பலரும் அன்றாடம் பயன்படுத்துபவை. ஆனால் அவற்றைப் பற்றித் தெரிந்த அளவு நமக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவரது வாழ்க்கை, கனவிலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்களையும் விசித்திரங்களையும் கொண்டது.


நம் வீட்டில் கணிப்பொறி இருப்பதற்குக் காரணமானவர் பில் கேட்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டாம். பில் கேட்ஸ் நடை பழகிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒலிம்பிக்ஸ் ஒட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்குமளவு முன்னேறியிருந்தார். பில் கேட்ஸ் அவ்வளவு பணம் சம்பாதிக்க அவரும் ஒரு காரணம். ஏன், அவர் தான் காரணம் என்றும் சொல்லலாம்.. மென்பொருள் எழுதுபவரா என்று கேட்க வேண்டாம். சம்பிரதாயத்திற்குக் கூட மென்பொருள் மொழிகளில் ஒரு வரி அவர் எழுதியதில்லை. மென்பொருளின் மகத்துவத்தை மிகவும் லேட்டாகவே புரிந்துக் கொண்டவர்!


கணினியை வீட்டிற்குள் கொண்டு வந்த அவரால், வீட்டுக்குள் வரும் உலகமான இணையத்தில் இணைய முடியவில்லை. ஆனால் இணையம் சிருஷ்டிக்கப்பட்டதே அவரின் சிருஷ்டியில்தான்.

கணினித் துறையின் முதல் அடியை எடுத்து வைத்த அவர், தமது முதல் கனவான கணினியைக் கடந்து மூவிஸ், மியூசிக், மொபைல் என மூன்று உலகங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டார்.

தற்காலத் தலைமுறை குழந்தைகள் கண்டுகளிக்க கார்ட்டூன் படங்களைத் தயாரித்தார், பலர் ஆஸ்கர் விருது வாங்கக் காரணமானார். உலகில் மொத்தமாக இருக்கும் பாடல்களை நம் பாக்கெட்டிற்குக் கொண்டு வந்தார். இசை இப்படித்தான் விற்கப்படும் என்ற வியாபார விதிகளை உடைத்தெறிந்தார். அமெரிக்க செல்போன் துறையைத் திகைக்க வைத்தார்.



ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் உருவான  விதம்:

சென்ற நூற்றாண்டில் உலகை மாற்றிய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் பிறந்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்ததும் அங்கே தான்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோயன் கரொல் சியபல்-க்கும் (Joanne Carole Schieble) சிரிய நாட்டை சேர்ந்த அப்துல் பட்டா ஜான் ஜன்டாலிக்கும் (Abdulfattah John Jandali) உண்டான காதல் கருவாகியது.

அமெரிக்காவிலும் அக்காலத்தில் மணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாட்டை விட்டுப் போகமுடியாது. ஆனால் இடம் மாறலாமே? நம் ஊரில் குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஏதாவது கண் காணாத ஊரில் பெற்றுக் கொள்வோம் என்று அவர்கள் முடிவு செய்த இடம் சான் பிரான்சிஸ்கோ!


படிப்பை முடித்து பட்டம் வாங்கினால்தான் கல்யாணம் என்று அவர்கள் இருவருக்குமிடையே உறுதிமொழி இருந்திருக்க வேண்டும். அல்லது கல்யாணமே வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. அந்நாளில் ‘கருக்கலைப்பு' உண்டு என்றாலும்  அதுவும் ஆபத்தானது. எனவே, பிப்ரவரி 24, 1955-ல் பிறந்த அந்த ஆண் குழந்தையைத் தத்து கொடுப்பது என முடிவு செய்தனர்.

தத்தெடுக்கத் தயாராக இருந்த லாயர் ஒருவர், ஆஸ்தி இல்லாமல் இருந்திருப்பார் போல. பெண் பிள்ளைதான் வேண்டும் என ஆசையை மாற்றிக் கொள்ள, தத்தெடுக்க பதிவு செய்திருந்தவர்களில் அடுத்த இருந்த பவுல் ஜாப்ஸ் பவுலா ஜாப்ஸ் தம்பதிக்கு குழந்தை கைமாறியதன் விளைவு, அந்த குழந்தைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற நாமகரணம் ஆனது.

பவுல் ஜாப்ஸ் யார்?

அமெரிக்காவின் இண்டியானா மாநில விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர், பவுல் ஜாப்ஸ். பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு கடற்படையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் சண்டை எல்லாம் போட்டு சான்பிரான்சிஸ்கோவிற்கு வந்து ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தார்.

ஒய்வாக ஒதுங்கிய இடத்தில் பவுலா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். மணந்த பின்பு பிறந்த ஊர்ப் பக்கம் போனாலும், கலிபோர்னியா காந்தமாய் கூப்பிட்டது. அது கலிபோர்னியாவின் மகிமை. மீண்டும் சான்பிரான்சிஸ்கோவிற்கே வந்து சேர்ந்தார். பவுலா, பவுல் ஜாப்ஸ் தம்பதிக்கு எல்லாம் நலமாய் இருந்தும் ஏனோ அவர்களின் கெட்ட நேரம் குழந்தை பிறக்கவில்லை.  தத்து எடுக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தபின் குழந்தை கிடைத்தும் கொஞ்ச முடியாத ஒரு சூழ்நிலை.

அம்மா கல்லூரிப் படிப்பை தாண்டவில்லை. அப்பா பள்ளிக்கூடத்தையே தாண்டவில்லை. இவர்களை நம்பி எல்லாம் எப்படிக் குழந்தையை தத்துக் கொடுப்பது என ஸ்டீவ் ஜாப்ஸை பெற்ற அம்மா பிடிவாதம் பிடிக்க, நாங்கள் படிக்கவில்லையென்றாலும் இவனைக் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைப்போம் என்று பலவாறாக ஜாப்ஸ் தம்பதியினர் உறுதிமொழி தந்தபின்தான் தடங்கல் நீங்கி தத்து நிறைவேறியது. ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பின்னரும் ஒரு பெண் குழந்தையை இவர்கள் தத்தெடுத்தனர்.


பள்ளிப் படிப்பு:

வாழ்வில் மிகப் பெரிதாக சாதித்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் பள்ளிப் படிப்பு பாகற்காயாகத்தான் இருந்திருக்கிறது. இவன் தேறாதவன் என்ற வாத்தியார்களின் வாக்கைப் பொய்யாக்கியவர்கள். இந்த விதிக்கு ஸ்டீவ் ஜாப்ஸும் விலக்கல்ல.

பள்ளிப் படிப்பு போரடிக்கிறதென வகுப்பில் பாம்புகள் விடுவது பட்டாசுகள் வெடிப்பது எனப் போக்கிரியாய் திரிந்துகொண்டிருந்தவரை வழிக்குக் கொண்டு வந்தவர். Imogene “Teddy” Hill என்ற அவரின் நான்காம் வகுப்பு வாத்தியாரம்மா. நன்றாகப் படித்தால் காசு, மிட்டாய், விளையாட்டுப் பொருள் எல்லாம் தருவதாகக் கூறி அவரின் கவனத்தை படிப்பின்பால் திருப்பினார். வாத்தியாரம்மாவின் வாக்குறுதிகளை எல்லாம் கேட்டு இந்த அம்மாவிற்கு கிறுக்காயிருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டதாகவும், அவர் மட்டுமில்லையென்றால் ஜெயிலுக்குப் போகுமளவு மோசமானவனாக மாறியிருப்பேன் என்றும் பிற்கால பேட்டியில் சொல்லி அந்தக் கல்விக் கடனை தீர்த்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

வாக்குறுதியின் விளைவாக வீறுகொண்டு, விடாமல் படித்ததன் விளைவு, ஸ்டீவ்விற்கு டபுள் பிரமோஷன். ஆனால் மேல்வகுப்புகள் செல்லச் செல்ல, பள்ளி மீண்டும் பாகற்காயானது. பிறவிக் குணமான பிடிவாதம் எட்டிப் பார்த்தது. ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் காரணமில்லை. பள்ளி பிடிக்கவில்லை. மாற்றினால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் பிற்காலப் பிடிவாதங்கள் போலவே இந்தப் பிடிவாதமும் பிரமாதமான பிள்ளையாரானது. சுபமான வாழ்விற்குப் பிள்ளையார் சுழியும் போட்டது.


புதுப் பள்ளிக்காக அவர்கள் குடியேறியிருந்த இடம் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்கள். புதுப் பள்ளியும் எலக்ட்ரானிக்ஸ் கற்பிப்பதற்கு மிகவும் பெயர் பெற்றது. ஸ்டீவ் வளர்ந்தோரோ இல்லையோ அவரது எலக்ட்ரானிக்ஸ் அறிவு வளர்ந்தது..
[இன்னும் வளரும்...]

**********************************************

Wednesday, October 19, 2011

தெரிஞ்சுக்கோங்க - மதராசப்பட்டிணம்

                * மதராசப்பட்டிணம் *

தராசப்பட்டிணத்தின் அரிய பழைய போட்டோக்கள் எனது பார்வைக்கு கிடைத்தது.அதனைப் பார்க்கும் போது எப்படி இருந்த மதராசப்பட்டிணம் இப்போது எப்படி இருக்கு? என்று எண்ணத்தான் தோன்றியது. இன்னும் ஒரு 50 வருடங்கள் முன்னோக்கிப் போகும் போது நிச்சயம் இப்போது இருக்கும் சென்னை வேறு மாதிரியாக மாறி விடும். என்ன ஒரு காலத்தின் மாற்றம்...ஆச்சர்யமாகத்தான் இருக்கு...


Marina Beech


Moubrays Road

Mount Road


 Mylapore


 Parrys


Pycrofts Road


First Lane Beach



Central


Egmore 1912


Chennai Market (Kothaval Chawadi) 1939


Chennai Library 1913 (college studensama)


Chennai Marina beech 1913
 Multi complex Departmental Store 1883



எல்லா போட்டோக்களும் எப்படி இருக்குங்க?

**************************************************

Monday, October 17, 2011

மற்றவை- ஸ்பெஷல் நியூஸ்


உள்ளாட்சி தேர்தல் : சில முக்கிய விசயங்கள்

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், அனைத்து இடங்களிலும் ஏகபோகமாக நடந்தேறிய பணப்பட்டுவாடாவை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய தேர்தல் ஆணையம், சிறப்பாக செயல்பட்டதற்காக மக்களிடத்தில் நல்ல பேரை சம்பாதித்தது. ஓரளவு பணப்பட்டுவாடாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இன்று நடந்தேறிய உள்ளாட்சி தேர்தலுக்காக, எனக்குத் தெரிந்த வரை அனைத்து இடங்களிலும் மக்களுக்கு பணம், பாத்திரங்கள், சிலிண்டர் கனெக்சன், இன்னும் நிறைய விதத்தில் வேட்பாளர்கள் சார்பாக கொடுக்கப்பட்டன. நான் வசிக்கும் ஏரியாவில் கூட தே.மு.தி.க சார்பில் பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.கோடிக்கணக்கில் பணத்தை வேட்பாளர்கள் செலவழித்திருப்பது, அவர்கள் ஓட்டு கேட்க வரும் போது நன்றாகத் தெரிந்தது.

எப்போதும் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு இப்போது தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் செயல் நடுநிலைமையாக இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அதற்கு யார் காரணம்?

ஆளும் கட்சியினர் காவல்துறையினரின் துணையுடன் நிச்சயம் அவர்கள் நினைத்ததை செயல்படுத்திவிடுவர். எனவே அதிக பட்சமாக ஆளும் கட்சியினரின் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சந்தர்ப்பம் நிகழ வாய்ப்புண்டு. எந்தக் கட்சியினர் பெரும்பான்மை வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்..!
###################################################
இதர விசயங்கள்:

உள்ளாட்சி தேர்தலுக்குப்  பின் நடக்கவுள்ள விசயங்கள் இவைதான்:(எனது எண்ணத்தில் தோன்றியவை)

இத்தனை நாள் மெளனமாக இருந்த எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த், ஆளும் கட்சி மீதான தனது கசப்பை எதிர்ப்பாக காட்டுவார்.

ஜாமினுக்கு அப்பீல் செய்த கனிமொழிக்கு ஜாமின் கிடைத்து விடும்.

தயாநிதி விசயத்தில் சில விசாரணைகள் மட்டும் நடைபெற்று முடிவில் அவரது கைது விசயம் புஸ்வாணமாக ஆகலாம்.

உள்ளாட்சியில் ஒரு வேளை ஆளும் கட்சியினர் அதிகளவில் வெற்றி பெற்றால், அதற்கப்புறம் தி.மு.க.வினரின்  மீதான நில அபகரிப்பு + கைது நிகழ்ச்சிகள் இன்னும் தீவிரமடையும்.
###################################################

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் போது, 7ம் அறிவு, வேலாயுதம் படங்கள்தான் ரிலிஸுக்கு கன்பார்ம் ஆகியிருக்கிறது. சூர்யாவின் படத்தைப் பார்ப்பதில்தான் நிறைய பேருக்கு எண்ணம்.அப்புறம்தான் விஜய் படம். ஒரு வேளை 7ம் அறிவு வெற்றி பெற்று , வேலாயுதம் தோல்வி அடைந்தால் நிச்சயம் சூர்யாவின் மார்க்கெட் இன்னும் எகிறும். விஜய் தனது ரூட்டை மாற்ற வேண்டும்.

லேட்டஸ்ட் டெக்னாலஜியில் 3D தொழில் நுட்பத்தைக் கொண்டு சென்னை-மாயாஜாலில் நடத்திய ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நினைத்தமாதிரி
வெற்றியடையவில்லை. காரணங்கள் நிறைய உள்ளன..சொன்ன நாளில் நடத்தாமல் சில நாட்கள் கழித்து நடத்தியது, ஒளிபரப்பும் உரிமையை திடீரென்று விஜய் டி.வியிடமிருந்து , ஜெயா டி.விக்கு கைமாற்றியது என இன்னும் நிறைய. இப்போது கோயம்புத்தூரில் நடத்த வேண்டிய நிகழ்ச்சியைவேறு தாமதப்படுத்தியிருக்கிறார்கள்.. என்ன இருந்தாலும் நம்ம இசைப்புயல் ரஹ்மானை மிஞ்ச முடியுமா?
####################################################
விலைவாசி??:
 
சில மாதங்களுக்கு முன்பு நான் வாங்கிய மருந்து, மாத்திரைகள், இப்போது வாங்கிய போது அதிகபட்சமாக விலையேற்றப்பட்டிருந்தது தெரிந்தது. அதனைப்  பற்றிக் கேட்ட போது மருந்துப் பொருட்கள் மீதான் வாட் வரி ஏற்றியதால்தான் இந்த விலையேற்றம் என்று மெடிக்கல் உரிமையாளர்கள் சொன்னார்கள். 25 ரூபாய்க்கு விற்ற பட்டர் ஸ்காட்ஸ் ஐஸ் கிரிம் திடிரென்று ஏற்றிய விலையினால் இப்போது அதன் விலை 30 ரூபாய். பெட்ரோலின் விலை லிட்டருக்கு 70 ரூபாய். அடுத்த வருட முடிவிற்குள் நிச்சயம் பெட்ரோலின் விலை 85 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

மூன்று வருடத்திற்க்கு முன்பு ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்வது மிக அதிகபட்சமாக இருந்தது. ஆனால் இப்போது 100 ரூபாய் நினைத்த மாத்திரித்தில் பாக்கெட்டை விட்டு சென்று விடுகிறது. விலைவாசியை நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஊதியத்திலும் ஏற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் மகிழ்ச்சியடைவர். ஆனால் அது மட்டும் ஏன் நடக்கவே இல்லை...?  எங்கேயோ தப்பு இருக்குதுங்க...!
####################################################

நூறு கோடி மரங்கள் வளர்ப்போம் என்று தனது பிறந்த நாளில் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் நம்ம முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம். பணத்தின் தேவை அதிகமானதால் இருக்கின்ற விளை நிலங்களை ப்ளாட்டுகளாக மாற்றி,  சுற்றுப்புற சூழ்நிலையை மேலும் மேலும் வெப்பப்படுத்தி வரும் மக்களுக்கு அவரின் அழைப்பு புரியுமா? அவர் சொன்னதைப் போல் செய்தால் மீண்டும் ஒரு பசுமையான இந்தியாவை நாம் பார்க்கலாம். But இது நடக்குமா?
******************************************************