Wednesday, September 28, 2011

தெரிஞ்சுக்கோங்க - Someone Watches

சில நாட்களாக பதிவு எழுதாததால் "ஏன் பதிவு எழுதவில்லை?" என்று நிறைய நண்பர்கள்  கேட்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கணம்  யோசித்துப் பார்த்தேன். பர்சனல் வேலைகள் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் பதிவுகள் எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டேன். காரணம் , பதிவுகளை தினமும் தவறாமல் படித்து வரும் நண்பர்களின் எதிர்பார்ப்பை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். So எனது அடுத்த பதிவு இப்போது வெளியிட்டுள்ளேன்.

மிக மிக முக்கியமான விசயம்:

சென்னை, மும்பை மற்றும் இதர மெட்ரோசிட்டிகளில் இருக்கும் ஷாப்பிங் மால்கள், டெக்ஸ்டைல் ஷோரூம்கள் சிலவற்றில், பாத்ரூம்களிலும், டிரையல் ரூம்களிலும் (முக்கியமாக பெண்களின் பாத் ரூம்கள், டிரையல் ரூம்கள்) ஹிட்டன் கேமரா(Hidden Camera) மற்றும் டூ-வே கண்ணாடி (Two way Mirror) போன்ற ஹை-ஃபை எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, யாரும் எளிதில் கண்டு பிடிக்காத வண்ணம் பொருத்தி வைத்திருக்கின்றனர். தனது சிற்றின்ப வேட்கையை தீர்த்துக் கொள்வதற்காக நிறுவனத்தின் உரிமையாளர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களைச் செய்து வருவதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

ஷாப்பர்ஸ் ஸ்டாப், பிக் பஜார் மற்றும் சென்னை-அண்ணாநகரில் போஸ்ட் ஆபிஸுக்கு அருகில் கிரவுண்ட் ப்ளோரில் இருக்கும் ஒரு பெண்களுக்கான  டெக்ஸ்டைல் ஷோரும் போன்றவற்றில் டிரையல் ரூம்களில் ஹிட்டன் கேமரா இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.எனவே அனைத்து நண்பர்களும் நண்பிகளும் இந்த விசயத்தில் கொஞ்சம் விழிப்போடு இருங்கள்.

ஹிட்டன் கேமரா(Hidden Camera) இருப்பதை கண்டறியும் முறை:
டிரையல் ரூமுக்கு உள்ளே செல்லும் முன் உங்களது செல்ஃபோனின் மூலம் ஒரு அவுட் கோயிங் கால்(Outgoing Call) செய்து நெட்வொர்க் பிரச்சனையின்றி இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். பின் டிரையல் ரூமுக்கு உள்ளே சென்று மீண்டும் அதே மாதிரி ஒரு அவுட் கோயிங் கால்(Outgoing Call) செய்து பாருங்கள்.
நெட்வொர்க் பிரச்சனையின்றி இருந்தால் அங்கு எந்த கேமராவும் பொருத்தி வைக்க வில்லை என்று அர்த்தம். அவுட் கோயிங் கால் செல்லாமல் நெட்வொர்க் பிரச்சனை இருந்தால் நிச்சயம் அங்கு ஹிட்டன் கேமராவைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். எனவே டிரையல் ரூமில் உடைமாற்றும் போது முதலில் இச்சோதனையை செய்து கொள்ளுங்கள்.

டூ-வே கண்ணாடி (Two way Mirror) இருப்பதை கண்டறியும் முறை:
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கண்ணாடி ஒன்-வே மிரர் என்ற அழைக்கப்படுகிறது. ஆனால் டூ-வே கண்ணாடி என்பது, பிம்பத்தை கண்ணாடியின் இரு புறமும் வெளிப்படுத்தக்கூடியது. சாதாரணக் கண்ணாடியின் பின்புறத்தில் சில்வர் கோட்டிங் இருக்கும். ஆனால் டூ-வே கண்ணாடியில் சில்வர் கோட்டிங் மேற்புறத்தில் இருக்கும். அதனைக் கண்டறியும் முறை.

                                           ஒன்-வே கண்ணாடியின் பிம்பம்

படத்தில் இருப்பது போன்று நமது விரல் நகத்தின் நுனியை கண்ணாடியை தொடும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நகத்தின் நுனியும்,
கண்ணாடியில் வெளிப்படும் பிம்பத்திற்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்தால் அந்தக் கண்ணாடி ஒன்-வே கண்ணாடி. அவ்வாறு இடைவெளி
இல்லாமல் இருந்தால் நிச்சயம் அந்தக் கண்ணாடி டூ-வே கண்ணாடிதான். கண்ணாடியின் மறுபுறம் உங்களை நிச்சயம் யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த விசயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்.

இதனைப் பற்றிய மேலும் நிறைய தகவல்கள் இணையத்தில் உள்ளன. ஆவலிருப்பின் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.

#######################################################

தங்க நகைகளின் சேதாரம்:

இன்றைய நவீன முறை நகை தயாரிப்பில், கிட்டத்தட்ட 1% கீழ் சேதாரத்தைக் கொண்டு வரும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. நகைத் தயாரிப்பில், தங்கத் தூள்களைச் சேகரிக்கும் இயந்திரங்களை நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன.ஆனால் ஒரு நகைக்குக் 9% முதல் 45% வரை தங்கள் விருப்பம் போல் சேதாரம் வசூலிக்கின்றன நகைக் கடைகள். இப்படி முறையற்ற வகையில்தான் இன்னமும் வணிகம் நடக்கிறது.




மேலும் தங்க நகைகளை நியாயமான விலைக்கு வாங்கும் அமைப்புகள் இங்கு இல்லை. நீங்கள் "ஹால்மார்க்" முத்திரை குத்தப்பட்ட நகைகளை வைத்து இருக்கலாம்.ஆனால், அவற்றை இன்றைய மதிப்புக்கு அப்படியே விற்பது சாத்தியமே இல்லாதது. அதே போல "ஹால் மார்க்" முத்திரை குத்தப்பட்ட நகைகளாகவே இருப்பினும், ஒரு கடையில் வாங்கப்பட்ட நகையை இன்னொரு கடையில் மாற்றும் போது, 3% முதல் 8% வரை சேதாரம் கழிக்கும் அடாவடியான போக்கு இங்கு இருக்கிறது. அரசாங்கத்தால் ஏன் இதற்கு இன்னமும் தடை விதிக்கப்படவில்லை. வங்கிகள் தங்க நகைகளை வாங்கும் சேவையை கொண்டு வந்தால் தங்க முதலீட்டில் சிறிது மாற்றம் வரும்.



நன்றி - விகடன்.

*********************************************************

8 comments:

கோகுல் said...

கண்ணாடி மேட்டர் விழிப்புணர்வூட்டும் பிரதிபலிப்பு.
பகிர்வுக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வூட்டும் பிரதிபலிபுடன் பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்...


டூ -வே கண்ணாடியில்தான் அதிக அளவில் தவறுகள் நடக்கிறது...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்தும் அசத்தல...

N.H. Narasimma Prasad said...

பல முக்கிய தகவல்களை தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

ADMIN said...

நன்று.. இது புதிய விழிப்புணர்வை தரும்...!!!

Yaathoramani.blogspot.com said...

இரண்டு பதிவுகளும் அனைவரும் அவசியம்
தெரிந்திருக்கவேண்டிய விஷயங்கள்
பயனுள்ள விஷயத்தை படங்களுடன் மிக எளிதாக
புரிந்து கொள்ளும்வண்ணம் பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி தொடர வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விழிப்புணர்வு விஷயங்கள் கொண்ட பதிவு,பகிர்வுக்கு நன்றி குணா.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...