Tuesday, January 31, 2012

எ.பி.க - 17

ன்னம்பிக்கையைத் தரும் நிறைய கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதைதான் இது.  எதிர்பார்க்காத தருணங்களில் துன்பங்கள் வந்தாலும் அதனுள் மீண்டு வரவேண்டும் என்பதை ஒரு பறவையின் மூலம் நயமாக சொல்லியிருக்கிறார் கவிதையின் ஆசிரியர். அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு...

                         ** வாசலில் விழுந்த பறவை **


தற்செயலாக

வாசலில் விழுந்த ஒரு பறவை

காலூன்றி நிற்க முற்சித்தது

தடுமாறித் தடுமாறி விழுகிறது

இடைவிடாமல்

சிறகுகளை அடித்துக்கொள்கிறது

ஐயோ எனத் தாவி

அள்ளியெடுத்து

நீவித்தந்த விரல்உதறி

நழுவி நழுவி விழுகிறது

அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லை

நொண்டி நொண்டி

நடந்து செல்வதிலும்

பறப்பதிலும்தான்

அதன் கவனம் குவிந்திருக்கிறது

எப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையை

விடையறியா வலியில் துவள்கிறது மனம்

சில கணங்களுக்கு முன் பார்த்தேன்

பாடி முடித்த ஆனந்தத்தில்

தாழ்வான மரக்கிளையில்

துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்தது

அதன் சிறகின் மஞ்சள் அழகால்

மாலைப்பொழுதே வசீகரமானது

அதன் சின்னச்சின்ன நடை

அழகான ஒரு சித்திரம்

எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்

எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டது

எவ்வளவோ தடுமாற்றம்

எவ்வளவோ வேதனை

எப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது.

-பாவண்ணன்
**********************************************************

Saturday, January 28, 2012

எ.பி.க - 16

ம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில், வாழும் முறை வெவ்வேறாக இருந்தாலும் ஒரு சில விசயங்கள் பொதுவாகத்தான் இருக்கும். அந்த விசயங்களை ஒருவர் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.  எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. படித்துப் பாருங்கள்.

*** வாழ்க்கைப் புத்தகம் ***

வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையில்
வாழ்ந்த பக்கங்கள்
வாசம் மிகுந்தவை
வலிகளும் நிறைந்தவை!

பாசமுள்ள உறவுகள்
வேசமுள்ள நெஞ்சங்கள்
தோள் கொடுக்கும் உறவுகள
காலை வாரும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

கண்ட இடத்திலே கைகுலுக்கும்
போலி உறவுகள்
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.....!

வாழ்க்கை அா்த்தத்தோடு
வாழும் உறவுகள்
எப்படியும் வாழலாம்
என்றெண்ணும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

பாசத்தை விலை பேசி
பங்கு போடும் உறவுகள்
வறுமையிலும் வாழ்ந்து காட்ட
போராடும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்!

துவழ்ந்து போனால்
தூக்கி வீசும் உறவுகள்
நிமிர்ந்து நிற்கையில்
மார்தட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் உறவுகள்
தன்னை விட உயர்ந்திட்டால்
பழமை குத்திக்காட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.......!

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
பக்கங்கள் இரண்டு
நல்லதும் கெட்டதும்
நானிலத்தில் உண்டு
புரிந்து கொண்டால்
சொர்க்கமே நமக்கு....!

-அருந்ததி

*********************************************************

Friday, January 27, 2012

மற்றவை - சிரிக்க ஒரு கவிதை

நான் படித்த ரசித்த கவிதைகளில் சில வகைகள் அழகான வர்ணனைகள் கொண்டதாக இருக்கும். சில வகைகள் கருத்தாழமிக்கதாக இருக்கும். சில வகைகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்ற வரிகளைக் கொண்டவையாக இருக்கும். ஒரு சில வகைகள் நக்கலாக இருக்கும். அந்த வகையில் நான் ரசித்து சிரித்த ஒரு நக்கலான கவிதை இதுதான்.படித்துப் பாருங்கள். கவிதை வகையில் இதனை சேர்க்கலாமா என்று யோசிக்க வைக்கும் வகையில் உரைநடை வடிவில் இருக்கின்ற ஒரு கவிதை.


என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
                             
********************************************************

Thursday, January 26, 2012

தெரிஞ்சுக்கோங்க - மச்சத்திற்கேற்ற பலன்கள்

மீபத்தில் ஒரு இணையதளத்தில் படித்த இண்ட்ரஸ்டிங்கான விசயமிது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களின் உடலில் உள்ள மச்சத்தை வைத்து
பலன்களை சொல்லியிருக்கின்றனர். எந்த அளவுக்கு இது உண்மை என்று தெரியவில்லை. படிச்சு பாருங்க. உங்களோட மச்சத்திற்கேற்ற பலன் இருக்கா?
இல்லையா? பதிலை பதிவு பண்ணுங்கள். இந்த பதிவைப் படித்ததும் பதில் சொல்வீர்களோ இல்லையோ தெரியாது, ஆனால் நிச்சயம் உங்கள் உடம்பில் உள்ள மச்சங்களை தேடுவீர்கள் என்பது மட்டும் எனக்கு தெரியும்.:)

உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!

சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம்.


பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்
புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
    நெற்றியின் வலது புறம் – தனயோகம்
    வலது புருவம் – மனைவியால் யோகம்
    வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
    வலது கண் – நண்பர்களால் உயர்வு
    வலது கண் வெண்படலம் – புகழ் ஆன்மீக நாட்டம்
    இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
    மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
    மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
    மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
    மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
    மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
    மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில்         நாட்டம்
    வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
    இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
    வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
    இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
    காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
    தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
    கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
    இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
    வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
    வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
    அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை


பெண்களுக்கான பலனகள்
    
நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
    நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
    நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
    மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
    மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
    மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
    மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
    மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
    இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
    வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
    வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
    நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
    கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
    இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
    தலை – பேராசை, பொறாமை குணம்
    தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
    தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
    தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
    வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
    அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
    இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
    வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.

************************************************************

Wednesday, January 25, 2012

தெரிஞ்சுக்கோங்க - கள்ள நோட்டு கண்டறிதல்

கள்ள நோட்டு கண்டறிந்து கொள்ளுங்கள்:

மிழகத்தின் சமீபத்திய ஹாட் நியூஸ் கள்ளநோட்டு புழக்கம்தான். பாண்டிச்சேரியில் பரவி இப்போது சென்னை மற்றும் இதர பெரு நகரங்களில்
பெருகி விட்டது.

ஏ.டி.எம்-க்கு சென்று நீங்கள் எடுக்கும் 500 மற்றும் 1000 ருபாய்களில் கூட கள்ள நோட்டு கலந்து இருக்கலாம். அதற்காக ரிசர்வு வங்கி மக்களுக்கு கள்ள நோட்டைக் கண்டறிய ஆலோசனை வழங்கி இருக்கிறது. அதற்கான சாம்பில் படங்கள் கீழே காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவைப் படிக்கும் நண்பர்களும், நண்பிகளூம் மறக்காமல் படித்து விட்டு உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

படம் சிறியதாக தெரிந்தால் , படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்.
500 Rs:

1000 Rs:





Maxsell -- Mx50i என்ற பெயரில் கள்ள நோட்டைக் கண்டறியும் மெஷினை அந்த பெயரில் இருக்கும் நிறுவனம் தயாரித்து உள்ளது. அனைத்து வங்கிகளும் இனி
அதனைப் பயன்படுத்தினால் மிக்க உபயோகமாக இருக்கும்.

அதனைப் பற்றிய வீடியோ:

                    
 
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

**************************************************

Tuesday, January 24, 2012

தெரிஞ்சுக்கோங்க - வரி விலக்குத் திட்டங்கள்


"மார்ச்" இந்தியாவில் பலபேருக்கு இரத்தக் கொதிப்பினை அதிகரிக்கும் மாதம். மார்ச் 31 என்பது நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும், அந்த நிதியாண்டின் வருமானவரியினை செலுத்தும் இறுதி நாள். இப்போது நாம் ஜனவரியில் இருக்கிறோம். இப்போதிலிருந்தே திட்டமிட்டால் மார்ச் இறுதிநாள் மனக் கஷ்டத்தை  தவிர்க்கலாம்.


இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் விசயங்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் , தெரிந்துகொள்ளுவதற்காகத்தான் நான் பகிர்கிறேன்.

இனி கட்டுரைக்கு போகலாமா?

வரி செலுத்துதல் என்பது ஒன்று. வரி விலக்குகள் என்பது இன்னொன்று. இந்தியாவில், வருமான வரி விலக்கு என்பது பல சலுகைகளாக பரவிக் கிடக்கிறது. என்னென்ன வகையில் வரி சலுகைகள் இந்தியாவில் இருக்கிறது என்பதற்கான கையேடு இது.

    காப்பீடு
    வீட்டு வாடகை
    வீட்டுக் கடன்
    ப்ராவிடண்ட் பண்ட்
    பென்ஷன் திட்டம் (NPS)
    பங்கு சார்ந்த காப்பீடு திட்டங்கள் (ULIPs)
    பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (ELSS)
    கட்டமைப்பு கடன் பத்திரங்கள்
    கல்விக் கடன்
    கல்வி - ட்யூஷன் தொகை
-------------------------------------------------------------------------------
காப்பீடு:

இந்தியாவில் தொடர்ச்சியாக தவறாக மார்க்கெட் செய்யப்படும் நிதி விஷயங்களில், காப்பீட்டுக்குதான் முதலிடம். ஏஜெண்ட்கள் கமிஷன்களுக்காக, நம்மை டபாய்த்து காப்பீடினை எடுக்க வைத்து விடுகிறார்கள். முதலீடும், காப்பீடும் வெவ்வேறு. நீங்கள், உங்கள் குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட வாழ்வியல் காப்பீட்டின்(Life Insurance Policy) ப்ரீமியத்தினை வரிச் சலுகையாக பயன்படுத்தலாம். செக்‌ஷன் 80C யின் கீழ் ஒரு லட்சம் வரை நீங்கள் வரிச் சலுகை கோரலாம்.

அதே போல மெடிக்கல் காப்பீட்டிலும் செக்‌ஷன் 80D யின் கீழ் ரூ.15,000 வரை வரிச் சலுகைக்குப் பயன்படுத்தலாம். உங்களின் பெற்றோர்களுக்கான மெடிக்கல் காப்பீட்டில் இன்னொரு ரூ.15000 வரை சலுகையுண்டு.
-------------------------------------------------------------------------------
வீட்டு வாடகை:

பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA - House Rent Allowance) இருப்பதைப் போலத் தான் சம்பளத்தினை நிர்ணயிப்பார்கள். இது வரிச் சலுகைக்கு உரியது. ஒரு வேளை HRA இல்லையென்றால், உங்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து 40% வரைக்கும் (நகரங்களில் இது 50%) நீங்கள் சலுகைகள் கோரலாம். செக்‌ஷன் 80GG யின் கீழ் இது சாத்தியம்.

ஒரு வேளை நீங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு, வருமானம் ஈட்டினால், அதன் வருடாந்திர வருமானத்திலிருந்து 30% வரை கழிப்பினை (deduction) செக்‌ஷன் 24 வழியாக கோரலாம். மேலும், கழிவுநீர் வரி, வீட்டு வரி போன்ற முனிசபல் வரிகளையும் அதிலிருந்து கழித்து விட்டு, மீதம் வரும் தொகைக்கு மட்டும் வரிக் கட்டலாம்.
-------------------------------------------------------------------------------
வீட்டுக் கடன்:

என்னதான் நச்சுபிடித்த மனைவியாய் இருந்தாலும், வீட்டுக் கடன் எடுக்கும் போது இருவருமாய் சேர்ந்தெடுப்பது நலம். நீங்கள் மட்டுமே கடன்காரராய் இருந்தால், வீட்டுக் கடனுக்காக நீங்கள் மாதாமாதம் கட்டும் EMIயின் வருடாந்திரத் தொகையில் ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் விலக்கு கோரலாம். இருவருமாய் சேர்ந்து கடனை எடுத்திருந்தால், தனித்தனியாய் 1.5 லட்சம் வரைக்கும் செக்‌ஷன் 24B யின் கீழ் கோரலாம். இரடிப்பு லாபமது.
-------------------------------------------------------------------------------
ப்ராவிடண்ட் பண்ட்:

மாதாமாதம் உங்கள் சம்பளத்திலிருந்து போகும் ப்ராவிடண்ட் பண்ட் தொகையும் வரி சலுகைக்கு உதவும். ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோரலாம். இது பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF)க்கும் உண்டு. ஆனால், அதிகப்பட்ச கழிப்பு ரூ.70,000.
 -------------------------------------------------------------------------------
தேசிய பென்ஷன் திட்டம் (National Pension Scheme - NPS):

நல்ல படங்களின் தியேட்டர்கள் காற்று வாங்கும். அந்த மாதிரி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக நல்லத் திட்டம் தேசிய பென்ஷன் திட்டம். யாருக்குமே தெரியாது. உங்கள் ஆடிட்டரையும் சேர்த்து, யாருமே சொல்ல மாட்டார்கள். தேசிய பென்ஷன் திட்டம் என்பது உங்களின் ரிட்டயர்மெண்ட் பணத்தினை சேர்க்கும் திட்டம். அதில் வரிச் சலுகைகளும் உண்டு. இதில் போடப்படும் பணத்தில், ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோர முடியும்.
-------------------------------------------------------------------------------
பங்கு சார்ந்த காப்பீடு திட்டங்கள் (Unit Linked Insurance Plans - ULIPs):

தனிப்பட்ட ரீதியில் எந்நாளும் யூலிப்களை நான் பரிந்துரை செய்வது கிடையாது. காப்பீடு வேறு. முதலீடு வேறு. ஆனாலும், இந்தியாவின் எல்லா முன்னோடி நிதி நிறுவனங்களும் சந்தையில் யூலிப்களை இறக்கி, மக்களை வாங்க வைத்து விட்டார்கள். அதிலும் எல்.ஐ.சி 2007களில் செய்தது அநியாயம். இப்போது காப்பீடு கண்காணிப்பு அதாரிட்டியால் (IRDA - Insurance Regulatory Development Authority) ஒரளவுக்கு இதன் அயோக்கியத்தனங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிகப்பட்சமாய் ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோரலாம்.
எச்சரிக்கை: ஏப்ரல் 2012க்கு பிறகு நேரடி வரி குறியீட்டின் (Direct Tax Code) வரைவுப் படி, இந்த சலுகைகளைக் கோர முடியாது.
-------------------------------------------------------------------------------
பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (Equity Linked Savings Scheme - ELSS):

யூலிப்பினையும், தேசிய பென்ஷன் திட்டத்தையும் விட மேம்பட்ட திட்டமிது. இதில் நேரடியாக சந்தையில் பங்குப் பெறும் வாய்ப்புகள் அதிகம். அதனால் ரிஸ்க்கும் அதிகம். இதன் பெரிய லாபம், ஒரு பக்கம் பங்குச் சந்தையின் மேம்பாட்டில், போட்ட காசும் பெருகும்; இன்னொரு பக்கம், வரிச் சலுகைகளும் கோர முடியும். அதிகப்பட்சமாக ஒரு லட்சம் வரைக்கும் கோரலாம்.
எச்சரிக்கை: ஏப்ரல் 2012க்கு பிறகு நேரடி வரி குறியீட்டின் (Direct Tax Code) வரைவுப் படி, இந்த சலுகைகளைக் கோர முடியாது.

இப்போதைக்கு கண்ணுக்குத் தெரிந்தவரை முதலீடும், வரி சலுகைகளும் நிரம்ப இருக்கும் ஒரே விஷயமாக தேசிய பென்ஷன் திட்டம் தெரிகிறது. போன வருட நேரடி வரி குறியீடு மறுசீராக்கத்தில், தே.பெ.திட்டம் EEE ஸ்டேட்டஸையும் பெற்று விட்டது.

EEE - Exempt-Exempt-Exempt என்பது வரி, உங்கள் பணத்தின் எதிர்கால ஸ்டேட்டஸ் என்பதைப் பற்றியானது. இந்தியாவின் பெரும்பாலான வரிச்சலுகை சமாச்சாரங்கள் EET (Exempt Exempt Tax). அதாவது, ஒரு திட்டத்தில் நீங்கள் பணம் போடும்போது அது வரிக்குள் வராது. இது முதல் E. (விலக்கு) அந்தத் திட்டத்தில் முதலீடாய் உங்கள் பணம் இருக்கும்போது வரி வராது. இது இரண்டாவது E. (விலக்கு) ஆனால், அந்தப் பணத்தினை பின்னாளில் எடுக்கும்போது, எடுத்த பணத்துக்கு வரி வருமா, வராதா என்பது தான் மூன்றாவது E / T. (விலக்கு / வரி) அதனாலேயே EEE பெற்றிருக்கும் தேசிய பென்ஷன் திட்டம் முக்கியமானதாகிறது. ஆக, இதுவரை தே.பெ.திட்டம் பற்றி யோசிக்கவில்லையானால், உங்களின் வங்கியினை அணுகுங்கள். எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இதை செய்ய முடியும்.
-------------------------------------------------------------------------------
கட்டமைப்பு கடன் பத்திரங்கள் (Infrastructure Bonds):

மேற்சொன்ன விஷயங்களில் நீங்கள் ஏற்கனவே ஒரு லட்சம் அதிகப்பட்ச தொகையை தாண்டிவிட்டால், கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். இந்தியாவில் கட்டமைப்பு என்பது நீங்கள் ரிட்டயர் ஆகும் வரை நடக்கக்கூடிய விஷயம். அடுத்த 30-40 ஆண்டுகள், இது இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. செக்‌ஷன் 80C யின் கீழ் ரூ.20,000 கூடுதலாக கழிப்பினை, கட்டமைப்பு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதின் மூலம் பெறலாம். சராசரியாக எல்லா கட்டமைப்பு கடன் பத்திரங்களும் 8% மேலான ரிடர்னை வழங்குகின்றன. ஆக, சலுகைக்கு சலுகையுமாச்சு. போட்டப் பணமும் 8% பாதுகாப்பாக வளரும் வழியுமாச்சு.
-------------------------------------------------------------------------------
கல்வி - ட்யூஷன் கட்டணம்:

செக்‌ஷன் 80C யின் கீழ், ஒரு லட்சம் வரையிலானக் கழிப்பினை உங்களின் இரண்டு குழந்தைகளுக்குப் பெறலாம். உ.தா. பொறியியல் படிப்பு படிக்கும் மகன்/ள் இருந்தால், அவர்களின் ட்யூஷன் பீஸ்ஸினை ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும், உங்கள் வருமானத்திலிருந்து கழிப்பு செய்து பயன் பெறலாம். ட்யூஷன் பீஸ் என்பது மொத்த பொறியியல் படிப்பின் கட்டணைத்தை சாராது. உ-தா ஹாஸ்டல் கட்டணங்கள், பேருந்து கட்டணங்கள்
-------------------------------------------------------------------------------
கல்விக்கடன்:

நீங்களோ, உங்கள் மனைவியோ, குழந்தைகளோ மேற்படிப்புக்காகக் கல்விக் கடன் வாங்கியிருந்தால், அதன் வட்டித் தொகையினை வரிக் கழிப்பிற்கு செக்‌ஷன் 80E யின் கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன, செக்‌ஷன் 80C யின் கீழ் வந்த ஒரு லட்சத்திற்கும் மேலே பயன்படக்கூடியது. கல்விக்கடனில் கட்டும் வட்டிக்கு மட்டுமே இந்த கழிப்புச் சலுகையுண்டு. அசலுக்கு இல்லை.


-------------------------------------------------------------------------------

Monday, January 23, 2012

தெரிஞ்சுக்கோங்க - எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும்?


விவரம் தெரிஞ்ச வயதிலிருந்து, இலஞ்சம் என்ற வார்த்தையை நம் தினசரி வாழ்வில் அன்றாடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். வித விதமான வகைகளில் அதனைப் பற்றி இன்னமும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நிறைய ஊடகங்கள், நிறைய திரைப்படங்கள் இலஞ்சத்தைப் பற்றி புத்திசாலித்தனமாக காட்சிகளைக் காட்டி, படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். இப்படி இலஞ்சத்தால் குளிர் காய்பவர்கள் ஏராளம்..ஏராளம்..


இலஞ்சத்தை ஒழிக்க முடியுமா?முடியாதா?

இந்தக் கேள்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களிடம் கேட்டால், "முடியும்.. ஆனா முடியாது.." என்று ஒரு திரைப்பட வசனத்தைப் போன்ற நடையில் பதில் சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலிருக்கும் குடும்பத்தலைவனும் குடும்பத்தலைவியும் இலஞ்சம் கொடுக்கக் கூடாது..பெறவும் கூடாது என்ற உறுதி மொழியை எடுத்து அதன் படி வாழ்ந்து காட்டினால் இலஞ்சத்தை ஒழிக்கலாம் என்று நமது முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வழிகூட சொல்லியிருக்கிறார்.

சரி.அவர் சொல்றது மாதிரி செய்ய முடியுமா?

அங்கதான் இருக்கு பிரச்சனை. இப்போது இருக்கும் விலைவாசி உயர்வுக்கேற்ற சம்பளம் இல்லை.. அதனால் வேறு வழியில்லை..குடும்பத்தை நடத்த வேண்டுமே?..பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமே.?.என்று அரசு துறைகளில் வேலை செய்பவர்கள் இலஞ்சம் வாங்குவதற்கான காரணத்தைச் சொல்கின்றனர்.


என்னதான் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைச் சொன்னாலும், அவர்களது மனசாட்சிக்குத் தெரியும் "இலஞ்சம் வாங்குவதும்...கொடுப்பதும் குற்றம்தான்" என்பது.

இலஞ்சம் வாங்கிய பணத்தைக் கொண்டு சோறு சாப்பிடும் சமயம், எங்கேனும் "இப்படியெல்லாம் இலஞ்சம் வாங்கி சோறு சாப்பிட்டா நிச்சயம் அது உடம்பில் ஒட்டாது.வியாதிதான் வரும். எங்க வயித்தில் அடிச்சிட்டு..அவன் சாப்பிட்டானா நிச்சயம் அந்த சாபம் சும்மா விடாது" என்று யாரேனும் காது பட பேசிக்கொண்டால் நிச்சயம் , இலஞ்சம் வாங்கியவனின் தொண்டைக்குள் சென்ற சாப்பாடு சில நிமிடம் அப்படியே நின்று விடும்.அதுதான் மனசாட்சி என்பது. அதனால்தான் சொல்கிறேன்.


தன் கடமையைச் சரியாகச் செய்து விட்டு அதற்காக மாதாமாதம் அரசு தரும் சம்பளத்தை மட்டும் வாங்கி தன் குடும்பத்தை வழி நடத்தும் ஒவ்வொரு நபரும் நிச்சயம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள்தான். பாராட்டப்பட வேண்டிய மேன்மக்கள் அவர்கள்.  அப்படி இல்லாமல், இலஞ்சத்தை வாங்குபவர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழாதவர்கள்தான். தன் நலம், தன் குடும்ப நலம் மட்டுமே அவர்களது குறிக்கோள்.
         

 
இந்த இலஞ்சம் என்ற ராட்சஸனை எப்படி அழிப்பது என்று யோசிக்கும் போது, தினமலரில் இன்று வெளியான ஒரு கட்டுரை அதற்கான விடையைத் தந்தது. இந்தக் கட்டுரையை நீங்களும் படித்துப் பாருங்கள்.. நீங்கள் இலஞ்சத்தால் பாதிக்கப்பட்டால் , எங்கு?..எப்போது..?எப்படி.?.யாரிடம்? என்ற கேள்விக்கான விளக்கங்களோடு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங்க் சைட்ஸ் மற்றும் தினமலர் போன்ற பத்திரிக்கைகளில் அதற்கான பகுதிகளில் தைரியமாக பதிவு செய்யுங்கள்..நிச்சயம் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். மாற்றமும் வரும்.

   Frustrated Villager dumps Snakes in Office over alleged delay in allotment of land and demands for bribe.


தினமலரில் சிறப்புபகுதியில் இலஞ்சம் சம்பந்தமான மக்களின் குமுறல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு பகுதியை ஆரம்பித்தமைக்கு
ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போன்று அனைத்து ஊடகங்களும் தத்தம் பணியைச் செய்தால் நிச்சயம் நம் அடுத்த தலைமுறையாவது இலஞ்சத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தினமலரில் வெளியான கட்டுரையின் லிங்க் :
 http://www.dinamalar.com/News_detail.asp?id=390125

இந்தப் பதிவைப் படிக்கும் சக நண்பர்கள், நண்பிகள் நிச்சயம் இந்தக் கட்டுரையை உங்களைச் சார்ந்த நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எப்போதும் போல  ஜஸ்ட் லைக் தட் போல இருக்க வேண்டாம். ஏனெனில் இந்த பதிவின் நோக்கம் நீங்கள் படிப்பதற்கு மட்டுமல்ல..எல்லோரும் படித்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் என்பதுதான்..

கட்டுரை:

ரசுத்துறையினருக்கு லஞ்சம் கொடுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்' என்று "தினமலர்' அழைப்பு விடுத்ததுதான் பாக்கி... கணக்கில்லா கடிதங்களை எழுதி, குமுறலை கொட்டித் தீர்த்து குவித்து விட்டனர் நமது வாசகர்கள். அந்த அளவுக்கு, சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் லஞ்சம் புரையோடிப் போய்விட்டது. லஞ்சம் வாங்குவதை கண்டு மனம் குமுறும் நம்மில் பலரும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், லஞ்சம் கொடுத்தேனும் காரியத்தை முடிக்கவும் தயங்குவதில்லை என்பதே கசப்பான உண்மை. இந்நிலை மாறவேண்டும்.

லஞ்சப் பணத்தால் கிடைக்கின்ற சுகமும், சொத்துக்களும் நம் சந்ததிக்கு ஊட்டுகிற நஞ்சுப்பால் என்பதை, லஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்போர் உணர்ந்தால் மட்டுமே லஞ்சத்தின் ஆணிவேரையும் அடியோடு அறுத்தெறிய முடியும். ஆம், அதற்கான சூளுரையை அனைவரும் ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எது, எதற்கெல்லாம் லஞ்சம் கொடுக்க நேர்ந்தது என, வாசகர்கள் எழுதித் தள்ளிய வாக்குமூலங்கள் ஒவ்வொன்றாக இனி, இப்பகுதியில் வெளியாகும். இதன் நோக்கம், லஞ்சத்தை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்பதே. லஞ்சம் வாங்கியவர்கள் திருந்த வேண்டும்; லஞ்ச மறுப்பு துணிச்சல் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.
 
இதெல்லாம் ஒரு பிழைப்பா...?:
 
நீலகிரி மாவட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் எழுதுகிறார்...
சிங்காநல்லூர் உழவர் சந்தையில், நீலகிரி மலைக்காய்கறிகளை விற்கும் விவசாயிகள் 20 பேர் இருக்கிறோம்; மலைக்காய்கறிகள், கோவை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில்தான், எங்களை இங்கு வந்து காய்கறி விற்பதற்கு அரசு ஊக்குவித்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இங்கே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


உழவர் சந்தையில் பணி புரியும் உதவி நிர்வாக அலுவலர்கள், இப்போது எங்களிடம் ஒரு கடைக்கு தினமும் 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர்; தராத விவசாயிகளின் அடையாள அட்டையை ரத்து செய்வோம் என்று மிரட்டுகின்றனர்.
பொங்கலுக்கு ஒரு கடைக்கு ஐநூறு ரூபாய் கேட்டனர்; சிலர் தந்தனர்; பலர் தரவில்லை; உழைப்பவனிடம் பறிப்பது என்ன பிழைப்போ?
ரயிலில் பறக்கும் லஞ்சக்கொடி: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த வாசகரின் அனுபவம்...
நான் ஒரு சீனியர் சிட்டிசன்; ரயில்வே பயணச்சீட்டில் எனக்கு சலுகைக்கட்டணம் உண்டு. கடந்த 4ம் தேதியன்று, கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்காக, கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., டிக்கெட்டிங் சர்வீஸ் மையத்தில் டிக்கெட் எடுத்தேன்; அதில், எனக்குரிய கட்டணத் தொகையுடன், 100 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் எடுத்தனர்.
ஆனால், 10 ரூபாய் மட்டுமே எடுத்ததாக ரசீது கொடுத்தனர்; இதுபற்றி கேட்டதற்கு, "அப்படித்தான் வாங்குவோம்' என்று கூறி விட்டனர்; ரயில்வே ஸ்டேஷன் கண்காணிப்பாளரிடம் சென்று கூறியதற்கு, "நீங்கள் ஏன் அங்கே போய் டிக்கெட் வாங்கினீர்கள்?; எங்களால் எதுவும் செய்ய முடியாது,' என்று "பொறுப்பாக' பதில் கொடுத்தார்.
ரயில்வே ஏஜன்சிகள் இப்படி பகிரங்க கொள்ளை அடிப்பதற்குக் காரணம், ரயில்வே உயரதிகாரிகளுக்குப் போகும் லஞ்சம்தான். ரயில்வே இ-டிக்கெட்டிலேயே சர்வீஸ் சார்ஜ் சேர்த்து, போட்டுக் கொடுத்தால், ஏஜன்சிகள் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட முடியாது; அதை ஏன் ரயில்வே நிர்வாகம் செய்வதில்லை?
லஞ்சத்தை பதிவு பண்ணுங்க!: லஞ்சத்தை ஒழிக்க குறிச்சி கருப்புசாமி சொல்லும் ஆலோசனை...
அதிகமாக லஞ்சம் விளையாடும் அரசு அலுவலகங்களுக்கு அருகிலோ, கோவில் போன்ற பொது இடங்களிலோ, லஞ்சம் கொடுத்தது பற்றிய தகவல்களை பொது மக்கள் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்; இதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இந்த பட்டியலை பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம்; அதனால், லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது குறைக்கலாம்.
பட்டா மாறுதல் செய்வதற்கு சில நேரங்களில், கட்டுக் கட்டாய் லஞ்சம் கை மாறுகிறது; அதனை "கட்' பண்ணுவதற்கு ஆலோசனை தருகிறார் திருப்பூரைச் சேர்ந்த முருகராஜ்...
ஒருவர் பூமியை கிரயம் செய்யும்போது, பட்டா மாறுதல் மனுவில், வாங்குபவரும், விற்பவரும் கையெழுத்திட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் தருகின்றனர்; முன்பெல்லாம், இந்த மனு, தாலுகா அலுவலகத்துக்கு வந்து அவர்களாகவே பட்டா மாறுதல் செய்து கொள்வர்; தற்போது, இதனை அனுப்புவதில்லை. இதுவே, வருவாய்த்துறையினருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை "இன்டர்நெட்' மூலம் இணைத்தால் இதற்கு தீர்வு காணலாம்; கிரயம் முடிந்து, பத்திரம் "ஸ்கேன்' செய்யும்போது, அந்தந்த வருவாய் கிராமங்களில் சர்வே எண்களில் வாங்குபவர், விற்பவர், செய்தால், அதனை 30 விஸ்தீரணம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.


அப்போதே அனைத்து அலுவலகங்களிலும் உள்ள பட்டாவில் பதிவாகி, நேரடியாக வேறு பெயருக்கு பட்டா மாறுதலாகி விடும். அதற்கு சார்பதிவாளர் மற்றும் வருவாய்த்துறையினர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது. கிரயம் பெற்றவர், வருவாய்த்துறையை அணுகி, தனது பெயர் பட்டாவில் வந்த விபரத்துக்கு கணினி சிட்டா மனுச் செய்து, உண்மை நகலை பெற்றுக்கொள்ளலாம்.
இதனை தமிழக அரசு செயல்படுத்தினால், வருவாய்த்துறையிலும், பட்டா மாறுதலிலும் லஞ்சம் பெருவாரியாகக் குறையும். தொழில் நுட்ப வசதிகளைப் பயன் படுத்தினால், இதே போல பல துறைகளில் லஞ்சத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க முடியும்; யோசிக்குமா தமிழக அரசு?
ஒரு மாதத்தில் டிஸ்மிஸ்: பொள்ளாச்சி கோமங்கலம்புதூர் திருநாவுக்கரசு எழுதியுள்ள கடிதம்...
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் குறைக்க வேண்டுமெனில், ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கால வரையறை செய்ய வேண்டும்; குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணி முடியாவிட்டால், அதற்கான காரணம், விண்ணப்பதாரர்க்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்; அரசுக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு, உடனுக்குடன் ரசீது தரப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளுக்கு முரணாக செயல்படும் லஞ்ச அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு நாட்களுக்குள் விசாரித்து முடித்து, தீர்ப்பளிக்க வேண்டும். லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்க்கு மேல் முறையீடு வாய்ப்பு எதுவும் தராமல், பணியிலிருந்தும் "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.
பறிக்கப்படுவதே...லஞ்சம்: கோவை எஸ்.எம்.பாளையம் ஆசிரியர் காலனியிலிருந்து எழுதுகிறார் ஜெயராமன்...
புது வீடுக்கான "பிளான் அப்ரூவல்' வாங்க இரண்டாயிரம் ரூபாய், மின் இணைப்புக்கு மூவாயிரம் ரூபாய், சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று வாங்க மூன்று முறை தலா 200 ரூபாய், எனது மூன்று பேரக்குழந்தைகளுக்கு பிறப்புச்சான்று வாங்க 300 ரூபாய்...என நிறைய லஞ்சம் கொடுத்துள்ளேன்; எனது அனுபவத்தில் லஞ்சம் தரப்படவில்லை; பறிக்கப்பட்டதே உண்மை.
ரயில்களில் டிக்கெட் வாங்க கணினி மயமாவதற்கு முன், அங்கிருந்த "புக்கிங் கிளார்க்' சொல்வதையே நம்ப வேண்டியிருந்தது; இன்றைக்கு, தொழில்நுட்ப முன்னேற்றம் அங்கே நடந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எல்லாத்துறைகளிலும் "மின் ஆளுமை'யை கொண்டு வந்தால், லஞ்சத்தையும், முறைகேட்டையும் பெருமளவில் தடுக்க முடியும்.
நேர்மையாளர்கள் பத்து சதவீதம்: சட்டங்களை கடுமையாக்குவதைத் தவிர, லஞ்சத்தை ஒழிக்க வேறு வழியே இல்லை என்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., வெள்ளிங்கிரி. அவரது கருத்துப் பகிர்வு...
லஞ்சம் இல்லாத துறை இல்லை. நூற்றுக்கு 90 சதவீதம் பேர், லஞ்சம் வாங்கித்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். லஞ்சம் கொடுக்காமல், எந்த அலுவலகத்திலும் எந்த வேலையுமே நடப்பதில்லை. லஞ்சம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில், அரசு அலுவலர்கள் உள்ளனர்.
நேரடியாக பலர் லஞ்சம் வாங்குகின்றனர்; சில அதிகாரிகள், தங்களுக்குக் கீழுள்ள அலுவலர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவும், உறவினர், நண்பர்கள் மூலமாகவும் லஞ்சம் வாங்குவதைப்  ரவலாகப் பார்க்க முடிகிறது; இவை எதுவுமே இல்லாமல், தெரிந்த இடங்களில் கொண்டு போய், லஞ்சம் கொடுக்கச் சொல்லும் அதிகாரிகளும் இருக்கின்றனர்.
லஞ்சம் இல்லாத வாழ்க்கையே வாழ முடியாதா என்றால் வாழ முடியும்; அதற்கு நமது சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; சட்டங்கள் கடுமையானால்தான், லஞ்சம் உள்ளிட்ட எல்லா குற்றங்களும் குறையும். எந்தெந்த வகையில், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென்று நீதித்துறைக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன்; இப்போது சட்ட கமிஷனுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
காத்திருக்க நேரமில்லை: அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது; சித்தப்பா என்று எப்போது அழைப்பது? என்கிற கதையாக, "சட்டங்கள் என்றைக்கு கடுமையாவது, அதுவரை லஞ்சம் தர வேண்டுமா' என்கிறார் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி. அவரது கருத்து...
சட்டம் கடுமையாகும் என்று காத்திருப்பது, கானல் நீரிலே தாகம் தணிக்க நினைப்பது போன்றது; என்றோ கிடைக்கும் தீர்வுக்காக, இன்று நடக்கும் பிரச்னையை கண்டு கொள்ளாமலிருக்க முடியாது.
இப்போது வாங்கும்லஞ்சத்தை இப்போதேதான் பிடிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவோரைத் தண்டிக்க, தற்போதுள்ள சட்டங்களே போதுமானதாக இல்லை என்பது ஓரளவு உண்மைதான்.
ஆனால், இந்த சட்டத்தின்படியே, ஏராளமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. லஞ்சம் பரவலானதைப் போல, அதை எதிர்ப்பவர்களும் பரவலாகவில்லை என்பதுதான் சமூக முரணாக இருக்கிறது. இந்த விகிதாச்சாரத்திலுள்ள இடைவெளியைக் குறைக்கின்ற பொறுப்பு, ஊடகங்களுக்கும் உள்ளது.
எந்தத் துறையில், எந்த அலுவலகத்தில் லஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினால், மக்களும், மேலதிகாரிகளும் கொஞ்சம் விழிப்படைவார்கள்; மக்களும் கொஞ்சம் ஒத்துழைக்க முன் வரும்பட்சத்தில்தான், அந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்; மீண்டும் மீண்டும் நாங்கள் வேண்டுவது, மக்களின் ஒத்துழைப்பைத்தான்.
வராவிட்டாலும் தரமாட்டேன்: இந்த முதியவரின் உறுதி, எல்லோருக்கும் வந்தால் எங்கே போகும் லஞ்சம்...?
எனது பெயர் சுப்பிரமணியம் (71); ஓய்வு பெற்ற நூலகர்; நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் வசிக்கிறேன். எனது 35 ஆண்டு கால நூலகப் பணியில், ஒரு குறிப்பட்ட அரசாணைப்படி, எனக்கு பணப்பலன் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்டிருந்தேன். அதற்கு, பொது நூலக இயக்குனர் அனுமதித்தவுடன் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று பதில் வந்தது.
உரிய சான்றுகளுடன் நூலக இயக்குனருக்கு விண்ணப்பித்தேன்; அதற்கு எந்த பதிலும் வரவில்லை. லஞ்சம் கொடுத்தால், இந்த நிலுவைத் தொகை நிச்சயமாக எனக்குக் கிடைத்திருக்கும்; அப்படி வாங்குவதற்கு எனக்கு மனமில்லாததால், ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறேன்.
இந்த போராட்டத்திலும், தகவல் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து, எனக்கொரு திருப்தி; எனக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை; ஆனாலும், நான் நிச்சயமாக லஞ்சம் தர மாட்டேன்.


 ************************************************************


Sunday, January 22, 2012

தெரிஞ்சுக்கோங்க - தட்டிக் கேளுங்கள்


லைப்பூவை ஆரம்பித்தவுடன் நிறைய எழுத வேண்டும் என்று ஆர்வம் எனக்குள் நிறையவே இருந்தது. அதற்கேற்றார்போல் தினமும் பதிவு எழுதி வந்தேன். சில மாதங்களில் சிறிய இடைவெளி விட ஆரம்பித்த பின்பு எழுத மனம் நினைத்தாலும் ஏதாவது ஒரு வேலை வந்து என் பதிவு பணிக்கு தடை போட்டது. இன்று எப்படியாவது பதிவு எழுதியே தீர வேண்டும் என்று நினைத்து, ஒரு வழியாக ஒர் பதிவை எழுதி விட்டேன்.  மேலும் "தினமும் பதிவு எழுத வேண்டும்" என மனதிற்குள் உறுதி சொல்லிக்கொண்டேன். இனி இன்றைய பதிவைப் படியுங்கள்...

தட்டிக் கேளுங்கள்.நிச்சயம் கிடைக்கும்:

இணையதளத்தில் நான் படித்த விசயமிது. பிள்ளைகளின் கல்லூரி படிப்புக்காக எஜுகேஷனல் லோன் வாங்குவதற்கு நிறைய பெற்றோர்கள் வங்கி அதிகாரிகளிடம்  கெஞ்சும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். "மாணவர்களின் படிப்புக்கு ஒவ்வொரு வங்கியும் நிச்சயம் லோன் தரவேண்டும்" என்று  நிதி அமைச்சர்கள் பேட்டியில் சொன்னாலும் கூட, வங்கி அதிகாரிகள் தலை அசைப்பது இல்லை. ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்(ஒரு சிலரைத் தவிர). அவர்களுக்கு, மக்களின் டெபாசிட் பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. இது சம்பந்தமாக ஒருவர் எழுதிய கட்டுரையை இணையதளத்தில் நான் படித்தேன். அவரின் சாமர்த்தியத்தையும் தைரியத்தையும் எண்ணி வியந்தேன். அந்தக் கட்டுரை இதுதான். நம் அனைவருக்கும் இந்தக் கட்டுரை நிச்சயம் பயன்படும் என்று நான் நினைக்கிறேன்.


" என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் ,அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை  க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி: மதுரை-ல் அப்ளை செய்தோம்.

அதற்கு முன்பே கவுன்செலிங் தியாகராஜா கல்லூரியில் நடந்தபோது அனைத்து வங்கிகளும் ஸ்டால் போட்டிருந்தார்கள். மிகக் கனிவாக விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டவர்கள்.  நேரில் போனபோது லோன் தர மறுத்தார்கள். 


பிறகு ஒரே ஒரு மெயில்
நிதி அமைச்சருக்கு, ஆர்பிஐ, கவர்னர் என்று யார் யார் மெயில் ஐடி கிடைத்ததோ எல்லோருக்கும் ஒரு சிசி (CC).

அடுத்த நாள் மேனேஜரிடமிருந்து போன் உடனே வாங்க சார் லோன் தரோம்னு :-)

அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்னதான் நடந்தது என்று.

வாய்ப்பிருக்கும்போது கூட துரும்பைக் கிள்ளி போடாதவர்கள் வெட்டி ஜம்பம் அடிக்கக்கூடாது.

முயற்சியே பண்ணாமல். இதை ப்ளாக்மெய்ல்னுகூடச்சொல்லிக்கிடட்டும் பரவாயில்லை. இதைத்தான் நான் சொன்னேன். இது லஞ்சம் கேட்டு மிரட்டும் காலம் இல்லை. லஞ்சம் கேட்பவனை மிரட்டும் காலம் என்று!

அமைச்சர் கேட்டு விடுவாரோ, நம்மீது ஆக்‌ஷன் எடுத்துவிடுவாரோ என்றே காரியங்கள் நடந்துவிட வாய்ப்பிருக்கிறது. சும்மா ஊழல் ஊழல் என்று பிலாக்கிணம் வைக்காமல் சட்டத்தின் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நாமும் முன்வரவேண்டும்.

அப்படித்தான் நடந்தது.
 
மேனேஜர் ஏறக்குறைய கெஞ்சும் தொணியில் ஏன் அப்படியெல்லாம் மெயில் அனுப்பினீர்கள் என்றாராம்.

அந்த மெயிலை அமைச்சர் பார்த்திருக்ககூட மாட்டாரு.:) ஆனா வங்கி அதிகாரிக்குத் தண்ணியில்லாத பிராஞ்ச் எல்லாம் கண்ணுலத் தெரிய ஆரம்பிச்சுட்டு இருக்கும்:)

நானும் முயற்சி ஏதும் எடுக்காமல் இந்த அரசாங்கம் வெறுமே சொல்கிறது எல்லாம் பித்தலாட்டம் என்று எழுதலாமே?

உண்மையாகவே அந்த சம்பவம் எனக்கு ஒரு தூண்டுதலாகவே இருந்தது.
தட்டிக் கேளுங்கள். தயவுசெய்து தட்டிக் கேளூங்கள். தட்டிக் கேட்க சட்டத்தில் ஏகப்பட்ட வழிகள் ஏற்கெனவே இருக்கின்றன. கேட்கத்தான் ஆட்கள் இல்லை".


*******************************************************************